Pages

Tuesday, April 17, 2018

ஆத்ம குணங்கள் - 7- மங்களம்





மங்களம் ஆறாவது.
அழுக்கில்லாத கிழியாத ஆடம்பரமில்லாத அவசியம் அணிய வேண்டிய ஆடை ஆபரணங்களை அணிதல்; நெற்றிக்கு திலகம் போன்றவற்றை இட்டுக்கொள்வது; எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது, சுபமான சொற்களையே சொல்லுவது; சாத்திரங்களில் விதித்த சிறந்த ஆசாரங்களை கைக்கொள்ளுவது, துன்பம் வரும் வேளைகளிலும் 'ஐயோ, எழவு, சனியன்' போன்ற சொற்களை கூறாமல் 'சிவசிவ, நாராயணா, க்ருஷ்ண க்ருஷ்ண' போன்ற பகவன் நாமாக்களை கூறுவது; அநாவசியமாக கேசத்தை வளர்க்காமல் இருப்பது;பெண்கள் கேசத்தை முடிந்தே வைத்திருப்பது, வெகு நேரம் ஈர உடையுடன் இருப்பதை தவிர்ப்பது ஆகியன மங்களம்.
தொல்லைகாட்சிகளில் வெள்ளிக்கிழமை மாலைக்குன்னு சில காட்சிகள் சிறப்பாக காட்டப்படும். குறைந்த பக்ஷம் ஒரு அழுகை. 'உன்ன என்ன செய்யறேன் பாருடி' ன்னு ஆரம்பிச்சு பல வசவுகள் நிறைந்த காட்சிகளே நிறைய தென்படுகின்றன என்று சொல்கிறார்கள்!
நெற்றிக்கு இட்டுக்கொள்வது பட்டிக்காட்டுத்தனமாக ஆகிவிட்டது, பெண்கள் கூந்தலை வெட்டி விட்டுக்கொள்வது, முடிந்து கொள்ளாமல் விரித்துபோட்டுக்கொள்வது ஆகியன சர்வ சாதாரணமாகிக்கொண்டு இருக்கின்றன. உடை பற்றியோ கேட்கவே வேண்டாம். கிழிந்து போன ஜீன்ஸ்தான் மஹா ஸ்ரேஷ்டம்! ராமாயணத்தில் தசரதரை வழிக்குக்கொண்டு வர கைகேயி போடும் வேஷம் பற்றி படித்தால் எது அமங்கலம் என்று சுலபமாக புரிந்து கொள்ளலாம். யாரானா கோட் பண்ணுங்களேன்!

No comments: