Pages

Thursday, March 1, 2018

கிறுக்கல்கள் - 179





இறப்பால எனக்கு வர அமைதியை நான் வரவேற்கிறேன்னு ஒருவர் சொன்னார்.
மாஸ்டர் கேட்டார்: இப்படி வரவேற்கிறவன் யார்?
நான்தான்!
நான் இறந்த பிறகே வரும் அமைதியை உன் 'நான்' எப்படி அனுபவிக்க முடியும்?

பின்னால் இந்த கதையை சொன்னார்: பட்டனும் ரிப்பனும் விற்று வறுமையிலேயே வாழ்கை நடத்திய வியாபாரி இறந்து போனார். அவர் விட்டுப்போனது எக்கச்சக்கமான இன்ஸ்யூரன்ஸ் பாலிசி! பெரும் தொகை கிடைத்த மனைவி அழுது கொண்டே சொன்னார்: பாருங்க, ராப்பகலா உழைச்சும் கடும் வறுமையிலேயே இருந்தோம். இவ்வளோ செல்வம் கடவுள் அனுப்பி கிடைச்சு இருக்கு; அத அனுபவிக்க அவர் இல்லியே!

No comments: