Pages

Monday, November 13, 2017

இறப்பு - 1





இறப்பைப்பற்றிய கோளாறான சிந்தனைகள். பயப்படாதீங்க! பிட்ஸ் அண்ட் பீஸஸா இருக்கும். கண்டுக்காதீங்க!

மனுஷன் என்கிறவன் பல விஷயங்களில தைரியசாலியா இருக்கலாம். ஆனா அனேகமா பயப்படுகிற ஒரு விஷயம் என்னன்னா இறப்பு!

வெகு சிலரே இந்த பயம் இல்லாம இருக்காங்க. அப்படி இருக்கறவங்க என்ன ரிஸ்க் வேணா எடுத்து என்ன வேணா செய்வாங்க. ஸ்டண்ட் செய்யறதாகட்டும், இப்ப காணாமப்போயிண்டு இருக்கற சர்கஸ்ல அரிதா சிலது செய்யறதாகட்டும், சாகசங்கள் செய்யறதாகட்டும் இல்லை தீவிரவாத செயல்கள் செய்யறவனாக இருக்கட்டும்... :(
யோசிச்சு பாத்தா இந்த பயம் எதுக்குன்னு கொஞ்சம் தமாஷாவே இருக்கு! ஏதோ வலி இருக்கும் கஷ்டப்படணும்ன்னு ஒரு விஷயம் இருந்தா அதுக்கு பயந்தாக்கூட கொஞ்சம் காரணம் இருக்கும். இறந்து போன பிறகு அதை 'அனுபவிக்க' அவர்தான் இருக்க மாட்டாரே? அப்புறம் என்ன பயம்? இறக்காதப்ப அவர்தான் இருக்காரே, என்ன பயம்? எப்படிப்பாத்தாலும் பயப்படறதுக்கு லாஜிக் தெரியலை!

பிலாசபிக்கலா யோசிக்க கத்துக்கொண்டவங்களுக்கு யம பயம் இராது. தினசரி யமனை உபாசிக்கறவங்களுக்கும் இராது. சந்தியாவந்தன கர்மாவில ஜபம் முடித்து திக் உபாசனைகளில இதுவும் ஒண்ணா இருக்கு. யம பயம் இராதுன்னு சாக மாட்டாங்கன்னு இல்லை; இந்த இறப்பைக் குறித்த பயத்தைத்தான் யம பயம் என்கிறாங்க.

ரைட்! இந்த இறப்பு என்கிறது என்ன? எது செத்து போகிறது? உடம்பா? அதுதான் அங்கயே அப்படியே இருக்கே? உடம்பிலேந்து காணாமல் போவது வேறு ஏதோ 'நான்' ன்னு நாம் சொல்லிக்கக்கூடிய ஒண்ணு. சாதாரணமா இதை உயிர்ன்னு சொல்லறாங்க.

என் சட்டை, என் கை என் கால்ன்னு சொல்லும்போது அதெல்லாம் வேற நாம் வேறன்னு தெளிவா தெரியறா மாதிரி என் உடம்புன்னு சொல்கிற இந்த உடம்பு நான் இல்லை. எங்காவது கடுமையான பயணம் போய்விட்டு வந்தா என் உடம்பு வலிக்கிறதுன்னு சொல்கிறோமே ஒழிய நான் வலிக்கிறேன்னு எங்கயானா சொல்லறோமா? அப்ப உடம்பு நாம் இல்லை. ஆனா 'நாம்' செயல்பட அது வேண்டி இருக்கு.

உடம்பு சரியா செயல்பட ஆயிரத்தெட்டு கண்டிஷன்ஸ்! பிசியாலஜி படிச்சா எப்படி இவ்வளோ ப்ராசஸ் ஒழுங்கா நடக்கறதுன்னு தோணும்! தப்பா நடக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் பெரும்பாலும் சரியாத்தானே நடந்துண்டு இருக்கு? அதனாலத்தானே நாம 'உயிர் வாழ்ந்துகிட்டு' இருக்கோம்? இருக்கற ஆயிரத்தெட்டு ப்ராசஸ்ல ஏதாவது அப்பப்ப சரியா நடக்கலைன்னா உடம்பு சரியில்லைன்னு சொல்லறோம். பெரும்பாலும் அது தன்னைத்தானே சரி செஞ்சுக்கும். கொடுக்கற மருந்துகள் அதுக்கு கொஞ்சம் உதவியா ஹேதுவா இருக்கும். அவ்ளோதான். உடம்பு இந்த மருந்தை ஒத்துக்கலைன்னா அதுக்கு பலன் இருக்காது. அதனாலத்தான் எல்லா மருந்தும் எல்லா நேரமும் எல்லாருக்கும் வேலை செய்யறதில்லை!

நொச்சூர் வெங்கட்ராமன் உரையில சொன்னார்: நாம எப்போ பிறந்தோம்? அது நமக்கு நினைவில இருக்கறதில்லை. எப்ப குழந்தைப்பருவம் போய் வாலிபம் வந்தது? எந்த புள்ளியில? தெரியாது. எப்ப வாலிபம் போய் வார்த்திகம் (கிழட்டுத்தன்மை) வந்தது, தெரியாது. எப்படி இதெல்லாம் எப்ப வரதுன்னே தெரியாம நாம் மாறிண்டே இருக்கோமோ அப்படித்தான் அதுக்கு அடுத்த ஸ்டேஜ் - இறப்பும்.

No comments: