Pages

Wednesday, September 27, 2017

கிறுக்கல்கள் -152





மாஸ்டரின் சீடர்கள் சிலர் ஒரு பிரபல மதத்தலைவரைப்பற்றி ஆஹா ஓஹோ என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். மாஸ்டரோ மௌனம் காத்தார்.

இது பற்றி அவரிடம் பின்னால் கேட்டார்கள்.

மாஸ்டர் சொன்னார்: பிறர் மீது தன் சக்தியை காட்டுபவர்கள் உண்மையான மத குரு இல்லை.
பின்னே? மதத்தலைவரின் வேலைதான் என்ன?
சட்டம் போட அல்ல; ஊக்கமூட்ட. வற்புறுத்த அல்ல; விழிப்புணர்வு ஊட்ட!

No comments: