Pages

Tuesday, September 5, 2017

வேதம் - 10





வேதத்தில் இந்த உலகில் தேவையாக இருக்கிற புத்திர ப்ராப்தி, நல்ல வது ப்ராப்தி, தீர்காயுசு, ராஜ்ய ப்ராப்தி, சத்ரு ஜெயம் இது போல எத்தனையோ நமக்குத்தேவையாக இருக்கின்ற இம்மை பொருட்களையும் வழங்கக்கூடிய பகுதிகள் உள்ளன. ஆனால் அவற்றை கொடுக்க காரணம் இதற்கு இவன் அநியதனமான உபாயங்களிலே சென்று விடக்கூடாதே; பொருளை பெற வேண்டும் என்பதற்காக துன்மார்க்கங்களிலே, வேறு அபர மார்க்கங்களிலேயே பிரவேசித்து தன் ஆத்ம சக்தியை வீணடிக்க கூடாதே என்பதற்காக தைபுண்ய விஷயாஹா வேதாஹா என முக்குணங்களில் அகப்பட்டு இருக்கிற மக்களை நீ வேறெங்கும் செய்ய வேண்டாம் செய்ய வேண்டுமானால் இங்கேயே செய்து கொண்டு இரு என்று மென்மேலும் அவர்களை சத்வ குணத்தில் உயர்த்துவதே வேதத்தின் நோக்கம்,

தேவதாத்மகமான பிரபஞ்சத்தை காண்பித்து, அதை தெரியாததாலே…. நமக்கு நீர் வேண்டி இருக்கிறது. அதை நாம் உற்பத்தி செய்கிறோம். நிலை மாற்றம் செய்கிறோம். தேக்கி வைக்கிறோம் தூய்மை படுத்துகிறோம். நீர் வளம் பெருக்குவதை பார்க்கிறோம். நாம் நீருக்கு போராடப்போகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள், ஏன் இது வந்தது? நீரை பெருக்குவதோ அல்லது பஞ்ச பூதங்களை நிலம் காற்று விண் இதை எல்லாம் மேலோட்டமாக அவற்றை ஜடப்பொருள்கள், உயிரில்லை என்று நம்மை விட தாழ்ந்ததாக நினைக்கும் விஞ்ஞானம் செயல்படுவதால் அவற்றை வளர்க்கவும் சேமிப்பதிலேயும் முழுமையாக வெற்றி அடைய முடியவில்லை. குறை கண்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வீழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
ஆனால் இவை நம்மைக்காட்டிலும் உயர்ந்தவை; நாமும் இவற்றுடன் ஒரு பகுதியாக இருப்போம்; நம்மில் இவை பகுதியாக உள்ளன; இருவரும் சேர்ந்து எம்பெருமானின் சரீரமாக இருக்கிறோம் என்னும் மேன்மையான மெய் நிலை அறிவினால் நாம் இவற்றால் வரக்கூடிய இடர்களையும் களையலாம்; இவற்றை பெருக்கிக்கொள்ளலாம்
 
அவர்களால் இதுபோன்றுள்ள நமக்குத் தேவையான போருட்களை பெருக்கி தேக்கி வைத்து அனைவருக்கும் வழங்க முடியாததால்தான் , அவற்றை பெருக்க முடியாது நீங்க உங்க பெருக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசுகள் அறிவித்துள்ளன. ஆண்மையான அரசு, இன்னும் பெருக்கித்தருவோம்; எத்தனை கோடி மக்கள் வந்தாலும் வளங்களை பெருக்கிக்கொடுப்பது சேமித்து கொடுப்பது அனைவருக்கு வாரி வாரி வழங்கக்கூடிய பசுக்களாக இருப்பதே நம் மறை சமுதாயம். நீ குறைத்துக்கொள், சாப்பிடாதே என்றெல்லாம் ஆணைகள் வெளியிடுவது இந்த அரசாங்கங்கள்.

No comments: