Pages

Saturday, July 22, 2017

லக்ஷ்மீ அஷ்டோத்தரம் - ஒரு திருத்தம் - சரியா தப்பா?





/ தமிழில் ஒரு பழமொழி உண்டு - “எழுதினவன் ஏட்டை கெடுத்தான்”

இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாமாவளிக்கு பொருந்துகிறது. முதல் நபர் செய்த தவறை நம்மில் பலரும் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம்லக்ஷ்மீ அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரத்தின் மூன்றாவது ச்லோகம் :

அதிதிம் ச திதிம் தீப்தாம் வசுதாம் வசுதாரிணீம்
நமாமி கமலாம் காந்தாம் காமாக்ஷீம் க்ரோதசம்பவாம்

இதனை ,

ஓம் அதித்யை நமஓம் தித்யை நம: ஓம் தீப்தாயை நம: ஓம் வசுதாயை நம: ஓம் வசுதாரிண்யை நம: ஓம் கமலாயை நம: ஓம் காந்தாயை நம: ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் க்ரோத ஸம்பவாயை நம:

என்றே 90% புத்தகங்கள் காட்டுகிறது.

கமலா - தாமரையில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மீ
காந்தா -(விஷ்ணுவின்) மனைவி
காமாக்ஷி - அழகிய கண்களை உடையவள்

இது வரை சரி; அடுத்த நாமா ?

க்ரோத ஸம்பவாயை - கோபத்தோடு உதித்தவள் அல்லது கோபத்தினால் உதித்தவள்.

இது சரியாக பொருந்தவில்லையே...

இப்படி அர்ச்சனை செய்வது சரியாகுமா? லக்ஷ்மிக்கே பிடிக்குமா?

1935ல் வெளிவந்த புத்தகங்களில் நாமா சரியாகவே பிரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வந்தவர்கள், யாரோ ஒருவர் அறியாமல் பதம் பிரித்து ”க்ரோத ஸம்பவா” என அச்சிடப்போக, பின்னாளில் வந்தவர்கள் யாருமே அதை சரிபார்க்காமல் அப்படியே அச்சிடுகிறார்கள். இன்று கிட்டத்தட்ட எல்லா புத்த்கங்களிலும் இணையத்திலும் அப்படியே தான் இருக்கிறது.

லக்ஷ்மீ அஷ்டோத்தரம் கொண்டு அர்ச்சனை செய்பவர்க்கு லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும், ஐச்வர்யம் பெருகும். ஆனால் மக்கள் பலரும் தாங்கள் கஷ்டப்படுவதாக புலம்புவதைப் பார்க்கும் போது - இது போன்று தவறுகள் இருப்பதைக் காண முடிகிறது.

நம்மை யாராவது “சிடுமூஞ்சி” என்றால் நாம் சந்தோஷப்படுவோமா? ஆனால் மஹாலக்ஷ்மியை இப்படி தவறாக அழைத்தால் பூர்ணமாக அனுக்ரஹம் எப்படி கிட்டும் ?

இனி சரியான பாடத்துக்கு வருவோம்

ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் க்ஷீரோத ஸம்பவாயை நம:

காமாயை - ஆசையின் வடிவானவளே
க்ஷீரோத ஸம்பவாயை - பாற்கடலில் உதித்தவளே

இது அம்ருத மதன காலத்தில் பாற்கடலில் இருந்து மஹாலக்ஷ்மி உதித்தாள் எனும் புராணத்துக்கு இசைந்து அமைகிறது.

வாசகர்கள் அனைவரும் இனி மேல் நாமாக்களை திருத்திக் கொண்டு மஹாலக்ஷ்மியின் பூர்ண கடாக்ஷத்துக்கு பாத்திரமாகுங்கள்.

- நன்றி திரு அரவிந்த் ஸுப்ரமண்யம்

இப்படி ஒரு பதிவு இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. இந்த நபரை நான் அறியேன். இவரிடம் எனக்கு ஒரு பஞ்சாயத்தும் இல்லை. ஆனால் இங்கே இப்படி சொல்லி இருக்கிறது என் அறிவுக்கு எட்டிய படி தப்பு.
இவர் சொல்கிறபடி பாத்தா பிரிக்கறதுதான் தப்பா பிரிச்சிருக்கு; யாரோ தப்பா பிரிக்கபோய் அதை எல்லாரும் கேள்வி கேட்காம அப்படி ஃபாலோ செய்யறா.
அப்படி இல்லை.
ஸ்லோகம்:
अदितिं च दितिं दीप्तां वसुधां वसुधारिणीम् ।
नमामि कमलां कान्तां कामाक्षीं क्रोधसंभवाम् ॥ १२॥
 
பிரிக்கறது சரியாத்தான் பிரிச்சிருக்கு.
காமாக்ஷீம் ன்னு சொன்ன போதே வார்த்தை முடிஞ்சுடுத்து க்ரோதசம்பவாம் அடுத்த வார்த்தை.
இல்லைன்னு சொல்லறதா இருந்தா சரியா இலக்கணத்தை சொல்லட்டும். எந்த விதிப்படி இது தப்பு?
மூல ஸ்லோகத்தில தப்பா ப்ரிண்ட் ஆயிருக்குன்னா அது வேற விஷயம். அதுக்கு ஆதாரம் காட்டட்டும். விசாரிச்சதுல "ஆமாம், தப்பா நாமாவளி இருக்கறதாகவும் முன்னே பழைய புத்தகங்களில சரியா இருந்ததாகவும் சொல்றாளே ஒழிய அந்த மாதிரி எந்த பழைய புத்தகத்தையும் பார்க்கலை" ன்னே மக்கள் சொல்றாங்க.
ஶ்ரீ அரவிந்த் சுப்ரமணியம் தயை செய்து மூலத்தில இருக்கிற ஆதாரத்தை வெளியிடட்டும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன் க்ரோத சம்பவா என்கிற பதம் இவருக்கு உறுத்துகிறது? ருத்ரனை கோபத்தின் வடிவமாவேத்தான் ஸ்தோத்திரம் செய்கிறோம். அவர் எவ்ளோ பாப்புலர்?
ஜனார்தனன் என்கிற பெயரும் ரொம்ப பாப்புலர். அதுக்கு என்ன அர்த்தம்? ஜனங்களை அழிப்பவன். க்ரோதசம்பவா என்பதாவது ஒரு குறையா சொல்லலாம். ஆனா இதை எப்படி சொல்லறது? பாசிடிவ்வா திட்றா மாதிரி இல்லே?  வியாக்கியானம் செய்யும் போது மக்கள் தன் சாதுர்யத்தை பயன்படுத்தி துஷ்ட ஜனங்களை அழிப்பவன்னு சொல்லிட்டு போயிடலாம்.
எல்லா தேவதைகளையுமே ஒரு பக்கம் ஜனங்களுக்கு அனுக்ரஹம் செய்வதாயும் இன்னொரு பக்கம் துஷ்டர்களை நாசம் செய்வதாகவுமேத்தான் வர்ணிக்கிறார்கள். அந்த 'நெகடிவ்' க்வாலிட்டியும் வேண்டித்தான் இருக்கு. துஷ்டர்கள் மீது கோபப்படுவது தவறில்லைதானே?
இப்படி இதை எல்லாம் நோண்டிப்பார்க்கிறதில என்ன பிரச்சினைன்னா ஒரு வேளை அஷ்டோத்திர பூஜை செய்யும் போது லக்ஷ்மி மனசில நிக்க மாட்டா. இந்த கான்ட்ரவர்ஸிதான் மனசில நிக்கும்!

No comments: