Pages

Monday, July 17, 2017

கிறுக்கல்கள் -139





மாஸ்டர் அடிக்கடி சொல்வது: நாம் பார்க்கிற விஷயங்களை அவை எப்படி இருக்கின்றனவோ அப்படி பார்ப்பதில்லை. நாம் எப்படி நினைக்கின்றோமோ அப்படி பார்க்கிறோம்.

இதை விளக்க ஒரு கதை சொன்னார்.

அவருடைய 81 வயது நண்பர் அடிக்கடி மடாலயத்துக்கு ஈர உடையுடன் சேரும் சகதியுமாக வருவார். என்ன விஷயம் என்று கேட்டால் வழியிலே ஒரு மைல் தொலைவில் ஒரு சிறு ஓடை இருக்கிறதே அதுதான் பிரச்சினை என்பார். முன்னெல்லாம் அதை ஒரு தாவலில் கடந்துவிடுவேன். ஆனால் இப்போதெல்லாம் தாவினால் பாதிதான் கடக்கிறேன்; அதனால் ஓடையில் விழுந்துவிடுகிறேன். ஓடை நாளடைவில் அகலமாகிவிட்டது போலிருக்கிறது. அதை கவனிக்கவே இல்லை.

மாஸ்டர் சொன்னார். ஆமாமாம். இளைய வயசில் குனியும்போது இருந்த மாதிரி இப்போது இல்லை! இப்போதெல்லாம் தரை இன்னும் கீழே போய்விட்டது போலிருக்கிறது.

No comments: