Pages

Tuesday, May 16, 2017

ஆன்மீக விசாரம் - 7





இப்படி மத்தவங்க பிக்சர்ல இல்லாம நாமே செய்யறது நல்லது. கண்ட்ரோல் இன்னும் அதிகமா இருக்கும். ஆனா ஒண்ணு! பலிக்கலைன்னா திட்டறதுக்கு வேற ஆள் இருக்காது! நம்மை நாமேத்தான் திட்டிக்கணும்! :-)
தனியா ஹோமம் செய்ய முடியும். அதைவிட ஜபம் சுலபம். ஆனா ஹோமத்துக்கே பலம் அதிகம்.
எந்த தேவதையை உபாசிக்கிறோம் என்பதில கொஞ்சம் சமாசாரம் இருக்கு. உக்கிர தேவதைகளோட ரூட் வேற. பலன் அதிகமா இருந்தாலும் சட்ட திட்டங்கள் அதிகம். தப்பா போச்சுன்னா அதுக்கு தண்டனைகளும் கிடைக்கும், இதன் பக்கம் போகமலே இருக்கறது நல்லது.
மாறா ஸௌம்ய தேவதைகள் இன்னும் கொஞ்சம் மன்னிச்சுடும். பலனும் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும். இருந்தாலும் இதுவே தேவலை.

நமக்கு வேண்டியது கிடைகிறதுல தடைகள் இருக்கலாம்ன்னு பாத்தோம் இல்லையா

தடைகளை நீக்க பிராயச்சித்தங்கள் சொல்லப்பட்டு இருக்கு. தர்ம சாஸ்திரத்துல பிராயச்சித்த காண்டம்ன்னு ஒண்ணு தனியாவே இருக்கு. ஆனா யாரும் அதை பார்க்கிறதில்லை. ஜோஸ்யர்கள் ஏதாவது சொல்லி இங்கே போ அங்கே போ இதை பண்ணு அதைப்பண்ணுன்னு சொல்வாங்க. நாமும் ஊர் ஊரா இதுக்காக சுத்துவோம்! முன்னே ஈ ஓட்டிக்கொண்டு இருந்த இடங்கள் சிலது எப்படி வளர்ச்சி அடைஞ்சு இருக்குன்னு பாத்தா ஆச்சரியமா இருக்கும். எல்லார் ஜோஸ்யர்களின் அருட்பார்வை பட்டதே காரணம்

சில இடங்கள் சில ப்ராயச்சித்தங்களுக்கு பெயர் பெற்றவை. அங்கே இருக்கிற தேவதைகள் அப்படி விசேஷ பலம் வாய்ந்தவை. அப்படி ஒரு ஏற்பாடு செஞ்சு இருக்கறதும் ஈஸ்வரன்தான். நம்பிக்கையுடன் சொல்லியதில் காம்ப்ரமைஸ் செய்யாம பிராயச்சித்தத்தை நிறைவேற்றி பலனை கண்டவர்கள் இருக்காங்க. 

No comments: