Pages

Friday, May 12, 2017

ஆன்மீக விசாரம் - 5





ஸோ செய்ய வேண்டியது இதை ஒழிக்கறது. எதையா? ஓ அது போன போஸ்டா? சரி சரி. வாசனையை ஒழிக்கணும்.
வாசனையை ஒழிச்சா சோறு நல்லா இருக்காதே ருசிக்காதேன்னு யாரோ கேக்கறாங்க. அது வேற வாசனை.
ரைட், இந்த வாசனை என்னது?

புதுசா ஒரு செயலை செய்யறோம். ரொம்ப கவனமா செய்வோம். புதுசு இல்லையா? அதை திருப்பித்திருப்பி செய்யறோம். செய்ய செய்ய அது பழகி போயிடும். அப்பறம் அசால்டா ஆட்டோமேடிக்கா செய்வோம். பழக்கம். ரொம்பவே பழக்கப்பட்டுட்டா அது வாசனை.
உதாரணமா ஒரு திருடன் இருக்கான். முதல் தரம் திருடப்போறான். பயந்துண்டே தயங்கி தயங்கி செய்வான். நாலஞ்சு தரம் ஆனா பிறகு பயம் கொஞ்சம் தெளிஞ்சுடும். ஆனா இப்பவும் கொஞ்சம் கவனத்தோடத்தான் செய்வான். இதுவே இன்னும் பல தரம் திருடின பிறகு ஒரு அலட்சியமே கூட இருக்கும்! கை ஆட்டோமேடிக்கா திருடும்!
ரிப்ளெக்ஸ்ல செய்யறது, இன்ஸ்டின்க்ட்ல செய்யறது எல்லாம் வாசனையோட விளைவுதான்.

சரி சரி, புரிஞ்சுடுத்து. அதை ஒழிக்கறது எப்படி?

ம்ம்ம் ரொம்ப நாளா இது கஷ்டம்ன்னு நினைச்சுண்டு இருந்தேன். இப்ப அவ்ளோ கஷ்டம் இல்லைன்னு தோணறது.
இந்த ஆட்டோமேடிக் செயலை நிறுத்தணும்.
அதுக்கு எந்த செயலையும் உடனடியா செய்யறதை நிறுத்தி கொஞ்சமே கொஞ்சமாவது யோசிச்சு செய்யணும். இதைப் பத்தி பேசிக்கொண்டு இருந்த போது ஒத்தர் சொன்னார். ஏதானாலும் முதல்ல நோ ன்னு சொல்ல பழகணும். (மனசுக்குள்ளத்தான்!) அப்பறமா நல்லது கெட்டது யோசிச்சு வேலை செய்யணும்!

இதையேத்தான் உசாநு என்கிற எமோஷனல் இன்டெலிஜன்ஸ் பத்தி பேசறப்பவும் சொல்லறாங்க. தானியங்கி செயல் சொல் வேணாம்; புத்தி பூர்வமா செயலும் சொல்லும் இருக்கட்டும். இது பழக்கத்துக்கு வர கொஞ்ச நாளாகும்; பரவாயில்லை

No comments: