Pages

Wednesday, May 10, 2017

ஆன்மீக விசாரம் - 3





எதையும் நீ செய்யலை; அவன்தான் செய்விக்கிறான் என்கிறதுக்கு நான் சப்போர்ட் பண்ணாலும்… அது ஒரு ஆட்டிட்யூட். எதையாவது செஞ்சுட்டு அது நல்லா நடந்தா நா செஞ்சேன்னு சொல்கிறதும் தப்பா போனா நான் என்ன செய்ய? எல்லாம் அவன் செயல்ன்னு சொல்லறதும்… அதுல கொஞ்சம் நேர்மை காணலை! அப்படி இருக்கற வரை இது சரிப்படாது. செய்ய தூண்டப்படறதை செஞ்சுட்டு விட்டுட்டு. ரிசல்ட் என்னவா வேணா இருக்கட்டும். கவலைப்படாதே! இப்படி இருக்க முடிஞ்சா ரைட்!

அப்படி இருக்க முடியலையே! புத்திக்கு தெரியறது; மனசுக்கு தெரிய வேணாமோ? தெரியறதில்லை. என்ன செய்யலாம்?

விவகாரத்துக்கு அடுத்து பார்க்கிற பிலாசபி சரிப்படும்.

புல்வெளியில முளை அடிச்சு ஒரு மாட்டை கட்டி இருக்காங்க. அது எவ்வளவு தூரம் மேயலாம்? கயிறு கட்டி இருக்குமே அது அனுமதிக்கிற தூரம் மேயலாம். இந்த தூரத்துக்குள்ள மேயவோ மேயாம இருக்கவோ சுதந்திரம் இருக்கு. இப்படித்தான் நமக்கும் ஓரளவு ஒரு எல்லைக்குள்ளே சுதந்திரம் இருக்கு. இதுக்குள்ள செயல்பட்டு கிடைக்கிற கஷ்ட நஷ்டம் உன்னோடதே. கூடவே ஏற்படர கர்ம பலனும் உன்னுதே!
இத இன்னும் கொஞ்சம் விசாரிக்க நடுவில ஏதேனும் புதர், பெரிய கல்லுன்னு தடைகள் இருந்தா அது கயிறை கட்டுப்படுத்தி முழுக்க மேய விடாம தடுக்கும். இதை நீக்கிட்டா முழுக்க மேயலாம். இந்த தடைகள் நம்மோட கெட்ட கர்மா. தடை நீக்கம் பிராயச்சித்தம்.
இது வொர்கிங் பிலாசபி

No comments: