Pages

Tuesday, May 2, 2017

கிறுக்கல்கள் - 210





தத்துவ ஞானி பாரபட்சமில்லாத உண்மை பற்றி நீண்ட ப்ரசங்கம் செய்தார்.

மாஸ்டர் சொன்னார்நீங்க சொல்கிறது உண்மையில் சத்தியம் இல்லை. அது நீங்க ப்ரபஞ்சத்தை பார்க்கிற பார்வை. நீங்க உணருவது இந்த ப்ரபஞ்சத்தை இல்லை; உங்களோட மனநிலையைத்தான்.

அப்ப யாராலும் சத்தியத்தை உணர முடியாதா?

முடியுமே! எண்ணங்களை கடந்தவங்களால முடியும்!

அட! என்ன மாதிரி மனுஷங்க இவங்க?


தான்/ நான் என்கிற அஹங்காரத்தை இழந்தவங்க. அதுதான் ஒரு ப்ரொஜக்டர் போல வேற படத்தை காட்டிகிட்டு இருக்கு. அது இல்லைன்னா ப்ரபஞ்சத்தை உள்ளது உள்ளப்டி பார்க்கலாம்!

No comments: