Pages

Tuesday, May 9, 2017

ஆன்மீக விசாரம் - 2




கர்ம மார்கத்தில இன்னும் அதிக பிரச்சினை.

எது நம்மோட கர்மா என்கிறதிலேயே இந்த காலத்தில நிறைய பிரச்சினை. பல காலமா பழக்கத்தில இருந்த குலத்தொழில் என்கிறது காணாமப்போனதுல இந்த குழப்பம். கர்மா என்கிறதும் நாம் சொத்துக்காகவும் சோத்துக்காவும் செய்யற வேலை இல்லை. நம்மோட ஒவ்வொரு செய்கையும் நாம் செய்கிற கர்மாத்தான்.
இது நாம் செய்யவேண்டியதுக்கு இசைவா இருக்கா என்கிறது பெரிய கேள்வி. அதுக்குள்ளே இப்ப போக வேண்டாம்.
செய்கிற காரியத்தை ஒரு அர்ப்பண மனோ பாவத்தோட செய் என்கிறாங்க. இதுக்கு கடனை செய்; பலனை எதிர் பாராதே ன்னு கோட் செய்யறாங்க.
பகவான் சொன்னது அப்படி இல்லையே! ஆனாலும் இது எப்படியோ மிகவும் பரவலா ஆயிடுத்து. கர்மாவை செய்ய மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கு; பலன் இப்படித்தான் இருக்கணும்னு நீ சொல்ல முடியாது, அதுக்கு எப்பவுமே உனக்கு அதிகாரம் இல்லை. இப்படித்தான் பகவான் கிருஷ்ணர் சொன்னார். இதை தப்பா சொல்லப்போக "யோவ்! எதையும் எதிர்பார்க்காம யார்தான் எந்த காரியமும் செய்வாங்க?” ன்னு எள்ளி நகையாடும் நிலை வந்துடுத்து.
கர்மாவை செய்ய என்ன அதிகாரம் இருக்கு? இதையே கேள்வி கேக்கிறவங்களும் இருக்காங்க. எதுவும் அவனின்றி அசையாது; நீ என்ன செஞ்சாலும் அவன் ஸ்கீம்ல இல்லைன்னா நடக்காது; எதையும் நீ செய்யலை; அவன்தான் செய்விக்கிறான் - இப்படி பல பார்வைகள் இருக்கு. யோசிச்சுப்பாத்தா இதுல முரண் இல்லைன்னாலும் வியவகாரத்தில பல சிக்கல்கள் வருதே!
ஒரு வேலையை நாம் செய்யலாம்; செய்யாம இருக்கலாம்; வேறு விதமா செய்யலாம். இதுக்கு மனுஷனுக்கு ஒரு சாய்ஸ் இருக்குன்னே பெரியவங்க சொல்றாங்க.
அதே போல கிடைக்கிற ரிசல்ட் நாலு விதமா இருக்கலாமாம்.
நினைச்சது போல நடக்கலாம்.
நினைச்சதை விட இன்னும் நல்லாவே நடக்கலாம்.
நினைச்சது நடக்காமல் போகலாம்.
நினைச்சதை தவிர்த்து வேறு விதமா நடக்கலாம்.
உதாரணமா ரயில் ஏறி அடுத்த ஊருக்கு போக நினைக்கிறோம். ஸ்டேஷனுக்கு போறோம். அது போலவே நடக்கலாம். ஸ்டேஷனுக்கு போய் இறங்கினா நண்பர் ஒத்தர் அட, எப்படி இருக்கீங்க? கார்ல போலாமேன்னு சொகுசா கொண்டு விடலாம். ட்ரெய்னை தவற விடலாம். போற வழில ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரிக்கு போகலாம்!
ஆக என்ன செய்யலாம் என்கிறதுக்கு உன் சாய்ஸ் இருக்கு. அது எப்படி நடந்து முடியும் என்கிறது உன் கையில இல்லை. உன் கையில இல்லாத பல விஷயங்கள் அதுல இன்வால்வ் ஆயிருக்கு. கிளம்பி ஸ்டேஷன் போகிறது உன் கையில இருக்கு. ஆனா போகிற வழில நடக்கிற திடீர் பந்த் உன் கையில் இல்லை

No comments: