Pages

Thursday, May 25, 2017

ஆன்மீக விசாரம் - 13





ஒவ்வொரு நம்பரையும் மனசில பதிஞ்சு நூறு வரைக்கும் எண்ண உங்களால முடியாதுன்னு தெரியும். போனாப்போறதுன்னு இன்னும் ஒரு சிம்பிள் பயிற்சி. மூச்சை இழுங்க. அதை கவனியுங்க. மூச்சை விடுங்க. அதை கவனியுங்க. அவ்ளோதான். தொடர்ந்து இதை 5 நிமிஷம்ன்னு ஆரம்பிச்சு 20 நிமிஷம் வரை பயிற்சி செய்துப்பாருங்க.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த மனசுதான் நம்மை நம்மோட சுயரூபத்தை தெரிய விடாம தடுக்கறது. எண்ணங்கள் குறைவாகி பின்னே இல்லாமலே போகணும். அது எங்கேயோ இருக்கு; வேற லெவல்; நமக்குச்சரிப்படாதுன்னு நினைக்காம சின்ன பயிற்சி செய்வோம். இது மனசை கவனிக்க பழகிய பிறகு செய்யணும். எவ்வளவு தூரம் ஆழ்ந்துன்னா, மனசு ட்ராக் மாறுவதை கவனிக்கும் அளவு. முன்னே எப்போத்தான் பிச்சுண்டுதுன்னு தெரியாம பிச்சுண்டு போயிடும்ன்னு சொன்னேன் இல்லையா? இப்ப எவ்வளவு கவனக்குவிப்பு இருக்கணும்ன்னா இந்த பிச்சுண்டு போற ப்ராசசையே கவனிக்கும் அளவு. அது பாட்டுக்கு போகட்டும். பதற வேணாம். அது எங்கே போறது. இப்ப இருக்கற எண்ணம் என்ன? சரி. அடுத்து வர எண்ணம் என்ன? சரி. இதை எல்லாம் மாத்த முயற்சிக்காம தொடர்ந்து கொண்டே போகணும்.  
ஆமாம். முன்னே பயிற்சியில ஓடின மனசை திருப்பி கொண்டு வான்னு சோன்னோம். மந்திர ஜபம் செஞ்சோம்; மனசு எங்கேயோ ஓடித்து; திருப்பி அதை ஜபத்துக்கு கொண்டு வா. மூச்சை கவனிச்சோம். மனசு பாட்டுக்கு வேறெங்கோ ஓடித்து; திருப்பி மூச்சை கவனிக்கறதுக்கு வா.
இப்ப இது இன்னும் அட்வான்ஸ்ட் ஸ்டேஜ். ஓடட்டும். தொடர்ந்து போ. அது என்ன நினைக்கிறது, நல்லதா கெட்டதான்னு எல்லாம் ஒரு ஜட்ஜ்மெண்டும் வேணாம். சும்மா கவனி.

இது மைண்ட்புல்னெஸ், விபாசனா தியானம்ன்னு எல்லாம் சொல்லறாங்க. இதோட விவரம் எல்லாம் அந்த ஸ்டேஜ் வந்தா பேசிக்கலாம்; என்ன சொல்றீங்க?

பகவான் ரமணர் சொன்னது இதுக்கு ஒரு படி அடுத்து. மனசை கவனி ஓடட்டும்; இது யாருக்கு வரதுன்னு கேட்டுக்கோ. அடுத்த எண்ணம் வரதா? வரட்டும்; கவனி; இந்த எண்ணம் யாருக்கு வரதுன்னு கேட்டுக்கோ. நான், எனக்குன்னு பதில் வரும். இந்த நான் என்கிறது யார்ன்னு விசாரி. அவ்ளோதான். இந்த பயிற்சியை ராத்திரி படுக்கப்போகும் போதும் காலை எழுந்த உடனும் அஞ்சு அஞ்சு நிமிஷம் செய்யச்சொல்லறார். அவ்ளோதான். மத்தபடி நம்மோட லோகாயத வேலைகளை கவனிக்கலாம்!
இந்த நான் என்கிறது உடம்பு இல்லை; மனசு இல்லை, புத்தி இல்லை என்கிறதெல்லாம் ஒரு தரம் விசாரிச்சாலே எஸ்டாப்ளிஷ் ஆயிடும். அப்புறம் அதுக்கு விடை கிடைக்காது. மனசு அப்படியே நிக்கும்…. அடுத்த எண்ணம் வரும் வரை. அப்புறம் பழைய கதையேதான். இந்த எண்ணம் யாருக்கு வரது? எனக்குன்னா அந்த நான் யார்?

No comments: