Pages

Friday, April 28, 2017

கிறுக்கல்கள் - 208





சாதாரணமாக மக்கள் அன்பு என்று சொல்வதைப்பற்றி மாஸ்டருக்கு எந்த மயக்கமும் இருந்ததில்லை. சிறு வயதில் ஒரு அரசியல் தலைவரும் அவரது நண்பரும் பேசிக்கொண்டு இருந்ததை நினைவு கூர்ந்தார்.
நம்ம கட்சி தலைவர் பதவிக்கு உனக்கு எதிரா போட்டி போடப்போறாராமே. உனக்கு தெரியுமா?”
அவனா! பொறுக்கி! அரசியல் தொடர்பாலத்தான் இன்னும் ஜெயிலுக்கு போகாம இருக்கான். அது எல்லாருக்குமே தெரியும்.”
நம்ம செயலாளர் கூட போட்டிப்போடப்போறாராமே!”
என்ன! அவனோட ஊழல் எல்லாம் வெளியே வந்துடும்ன்னு கொஞ்சம் கூட பயமில்லையா அவனுக்கு?”
ஹிஹிஹி! நா இதெல்லாம் சும்மாத்தான் சொன்னேன். நிஜமா அவங்களை இப்போத்தான் பாத்துட்டு வரேன். ரெண்டு பேரும் உன்னத்தான் சப்போர்ட் பண்ணறாங்க!”
அப்பாடா! பாத்தியா என்ன காரியம் செஞ்சுட்டே? ரெண்டு உத்தமர்களைப்பத்தி மோசமா சொல்ல வெச்சுட்டுயே!” 

No comments: