Pages

Wednesday, April 5, 2017

கிறுக்கல்கள் - 192




ஏன் நிறைய பேர் ஞானிகள் ஆவதில்லை என்று ஒருவர் கேட்டார்.
அவர்கள் லாபத்தை நஷ்டமாக பார்க்கிறார்கள். அதனால்” என்றார் மாஸ்டர்.

கேள்வி கேட்டவருக்கு புரியவில்லை.

மாஸ்டர் வியாபாரத்தில் இறங்கிய தன் நண்பர் பற்றி சொன்னார். சிறியதாக துவங்கிய வியாபாரம் நல்ல சூடு பிடித்தது. பொருட்களை வாங்க மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மாஸ்டர் நண்பருக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.

நண்பர் சொன்னார்: “யதார்த்தத்தை பார்க்கலாம். வாசல் கதவுகளை பாருங்க! இத்தனை பேர் வந்துகிட்டே இருந்தா சீக்கிரமே கதவுகளுக்கு கீல் மாத்த வேண்டி இருக்கும்!” 

No comments: