Pages

Thursday, August 18, 2016

உபாகர்மா - பயதங்கா.




இன்னைக்கு சிலர் உபாகர்மா செய்து இருப்பாங்க. இதுல ஒரு முக்கிய அங்கம் புதுசா பூணூல் போட்டுக்கறது. முன்னே எல்லாம் பல அளவில பூணூல் தயார் செய்வாங்க. அவரவர் கையில கட்டை விரல் நீங்கலா மத்த 4 விரல்களில 96 சுத்து சுத்தி அதை மூணு பிரி பூணூலாக்கினா அவங்களுக்கு சரியா இருக்கும். இப்பல்லாம் அப்படி யார் செய்கிறாங்க? கடையில் நூலை வாங்கி செய்கிறதுதான் அதிகம். அத்தோட இப்ப எல்லாமே யூனிவர்சல் சைஸ்தான். அதுவும் ஒன்னரை ஜோடி என்கிற மூணு பூணூல் தொகுப்புதான். தேவையான அளவுக்கு பிரிச்சுக்கோங்கன்னு அலட்சியமா பதில் வரும்.

கிடக்கட்டும். பலருக்கும் பிரச்சினை இது ரொம்ப நீளமா இருக்கறதுதான். நாபிக்கு சமமா இருக்கணும். அதிகமானாலோ குறைச்சலானாலோ தோஷம்ன்னு சாஸ்த்ரம். என்ன செய்ய?
நீளத்தை குறைக்க வழி பயத்தங்கா போடறது. அதாவது பூணூலை சரியான அளவை பாத்துண்டு அங்க பிஞ்ச் பண்ணிக்கோங்க. இப்ப அதை முறுக்கணும். தேவையான நீளத்துக்கு முறுக்கினதும் அதை மடக்கி முறுக்கினதை மீதி பூணூலோட சேர்த்து திருப்பியும் முறுக்கணும். கடைசியில முடிச்சு போடணும்.
படங்களை பார்த்து புரிஞ்சுக்கோங்க.
மேல் படத்தில  கீழே பார்க்கிற ஜங்ஷந்தான் அடுத்த படத்துல மேலே இருக்கு 





No comments: