Pages

Tuesday, August 9, 2016

கிறுக்கல்கள் - 151




ஜெயிலில் நடந்த இந்த உரையாடல் வெளியே கசிந்துவிட்டது. ‘அட! நிச்சயம் பெயரில் ஒலியைத்தவிர ஏதோ இருக்குதானே?’ என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். இதைக்கேட்ட மாஸ்டர் வழக்கம்போல் கதை சொன்னார்.

ஒருவர் சாலையில் கூவி விற்கும் வியாபாரியாக இருந்து உழைத்து முன்னேறி கோடீஸ்வரன் ஆனார். ஆனால் கையெழுத்து போடத்தெரியாது! அதனால் தன் செக்புக்கில் இரண்டு பெருக்கல் குறி மட்டும் இடுவார்! ஒரு நாள் வங்கி மேலாளருக்கு ஆச்சரியம். கையெழுத்தை மாற்ற விண்ணப்பம் கொடுத்து இருந்தார். அதைப் பார்த்தால் இரண்டு பெருக்கல் குறிகளுக்கு பதில் மூன்று இருந்தன! ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்தார்: எல்லாம் என் பெண்டாட்டியால் வந்த வினை. இப்ப சமூகத்தில் உயர்ந்தாச்சாம். அதனால் நடு பெயர் ஒண்ணு இருக்கணுமாம்

No comments: