Pages

Monday, August 8, 2016

கிறுக்கல்கள் - 150





ஜெயிலில் இருந்த சுதந்திர போராட்ட வீரரை சந்திக்கச்சென்றார் மாஸ்டர்.
நாளை உன்னை தூக்கில் போடப்போகிறார்கள். நீ அதை தைரியத்துடன் எதிர்கொள்வாய். முழுவதும் மகிழ்ச்சியுடன் அதை எதிர் கொள்ளதற்கு ஒரே ஒரு தடைதான் இருக்கிறது!”
அது என்ன மாஸ்டர் ”
உன் வீர தீர செயல்கள் மக்களால் நினைவில் வைக்கப்படும் என்ற ஆசை!”
அதில் என்ன தவறு?”
இது உனக்கு தோன்றி இருக்கிறதா? அவர்கள் உன் பெயரைத்தான் நினைவில் கொள்வார்களே தவிர உன் செயல்களை நினைவில் கொள்ள மாட்டார்கள்!”
அது இரண்டும் ஒன்று இல்லையோ?”
இல்லவே இல்லை. உன் பெயர் என்பது நீ கேட்ட மாத்திரத்தில் உன்னை கூப்பிடுவதாக நீ நினைக்கும் ஒலி! உன் அடையாளம். ஆனால், உண்மையில் நீ யார்? ”

அடுத்த நாள் தூக்கில் போட அவர்கள் வரும் முன்னே தான் இறந்துவிட இதுவே போதுமானதாக இருந்தது!

No comments: