Pages

Wednesday, July 20, 2016

கிறுக்கல்கள் - 147





உண்மையான ஆன்மீகம் சமுதாய சமாசாரம் இல்லை; ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமானது” என்று மாஸ்டர் சொல்வது மக்களுக்கு எட்டிக்காயாக இருந்தது. இதை கேட்ட மாஸ்டர் சொன்னார்:
ஒரு துருவக்கரடிக்குட்டி இருந்தது. அது தன் அம்மாவிடம் கேட்டது “அம்மா! என் அப்பா ஒரு துருவக்கரடியா?”
ஆமாம்ப்பா!”
கொஞ்ச நேரம் கழித்து அது மீண்டும் கேட்டது: “அம்மா! என் தாத்தாவும் ஒரு துருவக்கரடியா?”
ஆமாம்ப்பா!”
கொஞ்ச நேரம் கழித்து அது மீண்டும் கேட்டது: “அம்மா! என் கொள்ளு தாத்தா எப்படி? அவரும் ஒரு துருவக்கரடியா?”
ஆமாண்டா கண்ணு! ஆமா ஏன் திருப்பித்திருப்பி இப்படி கேக்கறே?”
ஏன்னா எனக்கு குளிர் தாங்கலே!”
மாஸ்டர் முடித்தார்: “ஆன்மீகம் சமூக சமாசாரமும் இல்லே; பரம்பரை சமாசாரமுமில்லே! அது ரொம்பவே சொந்த சமாசாரம்!” 

No comments: