Pages

Friday, July 15, 2016

கிறுக்கல்கள் - 146




விருந்தாளி மாஸ்டரிடம் புலம்பினார். “என் வாழ்க்கை உடைந்த கண்ணாடி போலாகிவிட்டது. ஆன்மாவில் தீயனவற்றின் கறை படிந்துவிட்டது. எனக்கு ஏதும் விடிமோட்சம் உண்டா?”
ஆமாம். உடைந்த எல்லாவற்றையும் ஒட்டி கறைகளை துடைத்து சுத்தமாக்கும் வழி ஒன்று இருக்கிறது!”
! என்ன அது?”
மன்னிப்பு!”
யார் எதை யாரை மன்னிக்க?”
“நீயேதான்! எல்லாரையும்! வாழ்க்கை, கடவுள், உன் அண்டை வீட்டுக்காரர், …. மிக முக்கியமாக உன்னையே!”
இதை எப்படி செய்வது?”
பழி சுமத்த யாருமே இல்லை என்பதை உணர்வதால்! ஆமாம். யாருமே இல்லை!” என்றார் மாஸ்டர். 

No comments: