Pages

Monday, July 11, 2016

கிறுக்கல்கள்! - 142




தன் சீடர்களுக்கு தான் பேசுவது புரியாமல் போக நிறையவே வாய்ப்பிருப்பது மாஸ்டருக்குத் தெரிந்துதான் இருக்க வேண்டும். இருந்தாலும் என்றோ ஒரு நாள் அது இதயத்தில் இருந்துகொண்டு வெளிவந்து மலர்ந்து விடும் என்ற நிச்சயத்திலேயே பேசுவார்!
ஒரு நாள் அவர் சொன்னார்:
நேரம் என்பது நம்மில் பலருக்கும் எப்போது நீண்டதாகவே காத்திருக்கும் போது தோன்றுகிறது; ஒரு விடுமுறைக்கு; பரிட்சைக்கு; அல்லது எதிர்காலத்தில் மிகவும் விரும்பியதோ பயந்ததோ நடக்க. ”

ஆனால் நடப்பதைப்பற்றி கவலையே இல்லாத; அது திருப்பி நிகழ வேண்டும் அல்லது நிகழவே கூடாது என்னும் எதிர்பார்ப்பு ஏதும் அற்ற; எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்வதற்கு பயின்ற ஒருவருக்கு காலம் என்பது முடிவில்லாத ஒளிமயமானதாக மாறிவிடுகிறது. ”

No comments: