Pages

Thursday, July 7, 2016

கிறுக்கல்கள்! - 140





அடுத்ததாக ஒரு கதை சொன்னார். அரசு புதிதாக நெடுஞ்சாலை அமைத்ததால் அது தன் வியாபாரத்தை பாதித்ததாக புகார் செய்த ஓட்டல்காரர் பற்றியது.
ஓட்டல்காரரின் நண்பர் சொன்னார்: “தோ பாரு! எனக்கு புரியவே இல்லே. தினமும் உன் ஓட்டல்ல ரூம் காலி இல்லைன்னு போர்ட் தொங்கறதை பார்க்கறேனே? ஏன் வியாபாரம் கெட்டுப்போச்சுன்னு சொல்லறே?”
ஓட்டல்காரர் சொன்னார்: “உனக்கு புரியவே இல்லே. இந்த ரோடு போடறதுக்கு முந்தி தினசரி அம்பது பேரையாவது இடம் இல்லேன்னு திருப்பி அனுப்புவேன். இப்ப இருபது முப்பது பேரைத்தான் திருப்பி அனுப்பறேன்!”
மாஸ்டர் மேலும் சொன்னார்: “நீ வருத்தப்படறதுன்னு முடிவு எடுத்துட்டா இல்லாத கஸ்டமர் கூட நிஜமாகிவிடுவார்!” 

No comments: