Pages

Tuesday, June 28, 2016

கிறுக்கல்கள்! - 134


கிருத்துவ பிரசங்கி ஒருவர் மாஸ்டரை எப்படியும் கடவுள் நம்பிக்கை குறித்த தெளிவான கருத்தை சொல்ல வைத்து மாட்டி வைத்துவிட வேண்டும் என்று முடிவுடன் வேலையில் இறங்கினார். மாஸ்டரை சந்தித்து கேள்விக்கணைகளை தொடுத்தார்.
கடவுளை நீங்கள் நம்புகிறீர்களா?”
இதென்ன கேள்வி? ஆமாம்.”
அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார். அதை நீங்கள் நம்புகிறீர்களா இல்லையா?”
ஆமாமாம். நிச்சயமாக!”
கடவுளை படைத்தவர் யார்?”
நீங்கள்தான்!”
என்னது? நீங்க நாந்தான் கடவுளைப்படைத்தவன் என்று நிஜமாக என்கிட்ட சொல்கிறீர்களா?”

மாஸ்டர் அமைதியாக சொன்னார். “நீங்க எப்ப பாத்தாலும் யாரைப்பத்தி நினைத்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கீங்களோ அவரை- ஆமாம் நீங்கதான் படைத்தீங்க!”

No comments: