Pages

Thursday, June 9, 2016

கிறுக்கல்கள் - 124


உண்மையைத்தேடி நான் எங்கே வேணுமானாலும் போகத்தயார்! என்றான் ஒரு சீடன்.
குருவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
எப்போ கிளம்பப்போறாய்?
நீங்க சொன்ன உடனே!
ரைட்! கிளம்பு!
எந்தப்பக்கம்?
உன் மூக்கு இருக்கற பக்கம்.
எப்போ நிக்கணும்?
எப்போ வேணுமானாலும்!
அப்ப உண்மை என் எதிரே இருக்கு.
நிச்சயமா! மூக்குக்கு வெகு அருகில்; உன் பார்க்காத கண்களின் எதிரேஉன்னை வெறித்து பார்த்துக்கொண்டு!

No comments: