Pages

Thursday, May 19, 2016

அத்வைதம் - 7


இததான் அஞ்ஞானம் என்கிறாங்க.
இந்த அஞ்ஞானம் எவ்வளோ சக்தி வாய்ஞ்சதுன்னா, இப்ப அத்வைதம் படிச்சு புரிஞ்சுக்கிறோம். அது புத்திக்கு புரிஞ்சாக்கூட செயலுக்கு வரது கஷ்டம்!
ஒரு சன்யாசி ஶிவோஹம் ஶிவோஹம் ந்னு (நான் ஶிவன்) சொல்லிண்டே இமய மலை மேலே ஏறிண்டு இருந்தாராம். ஓர் அளவுக்கு மேலே குளிர் தாங்கலை! தேஹோஹம் தேஹோஹம் ந்னு (நான் உடம்பு) சொல்லிண்டு இறங்க ஆரம்பிச்சுட்டாராம்!
நான் உடம்பு/ மனசு/ புத்தி ந்னு ஏதோ ஒண்ணை கற்பனை செய்து வைச்சிருக்கும் வரை நம்மால நம்மை உணர முடியாது. அதனால முதல்ல புத்தி பூர்வமா ஆராய்ச்சி செஞ்சு இதெல்லாம் நான் இல்லைன்னு புரிஞ்சுக்கணும்.
பொதுவா எல்லாரையும் கேட்டா நானா? தோ இருக்கேன் ந்னு தன்னை - தன் மார்பை- காட்டுவாங்க! சொல்லுப்பா நீ யாரு?
நான் வாசுதேவன்/.
அது உன் பேரு. நீ யாரு?
நான் ஒரு டாக்டர்.
அது நீ பார்க்கிற வேலை. நீ யாரு?
இந்த ரீதியில் கேள்வி வந்துகிட்டு இருந்தா பதிலுக்கு திணறுவோம், இல்லையா?
இந்த உடம்பு கூட நீ இல்லை. உன் உடம்புன்னு சொல்லறப்பவே நீ வேற இந்த உடம்பு வேறன்னு தெரியறதே?
ஐ திங். தேர்போர் ஐ ஆம் (Cogito ergo sum ) அப்படின்னு ஒரு சிந்தனையாளர் சொன்னார். நான் சிந்திக்கிறேன். அதனால நான் இருக்கிறேன். அதாவது சிந்தனை இல்லைன்னா நான் இல்லை.
தூக்கத்தில் இரு வகை. ஒண்ணு கனவு காண்கிற தூக்கம். அந்த நேரத்தில தூங்கறவரை பாத்தா கண்கள் வேகமா அசையறது தெரியும். இரண்டாவது இப்படி கண்கள் அசையாம தூங்கறது. இதை ஆழ்ந்த தூக்கம்ன்னு சொல்லலாம்.
கனவு காண்கிறபோது மனசு/ சிந்தனை கண்ட்ரோல்ல இல்லைன்னாலும் அது இருக்கு. ஆனா ஆழ்ந்த தூக்கத்தில அது இல்லையே? அப்ப நாம இல்லாம போயிடறோமா? எங்கே போறோம்? திருப்பி எழுந்துக்கும் போது எங்கேந்து வரோம்? சுகமா தூங்கினேன் ந்னு சொல்றோமே? அதை அனுபவிச்சது யாரு?
அப்ப மனசு நாம் இல்லை.
நான் மூச்சு விடறேன். அதனால நான் இருக்கேன். இந்த ப்ராணந்தான் நான்னு சிலர் நினைக்கலாம். அப்படின்னா சாகிறவங்களை வெண்டிலேட்டர்ல போட்டுட்டா சாகமலே இருக்கணுமே? அப்படி இல்லையே?
உயிர் என்கிறதை நவீன மருத்துவம் அறுதியிட்டு சொல்ல முடியலை. அதனாலத்தான் விஞ்ஞானிகள் அதுல இப்ப ஆராய்ச்சி செய்யறாங்க.
அப்ப உடம்பு நான் இல்லை. மனசு நான் இல்லை. உள்ளேவும் வெளியேவும் போய் வர காத்து நான் இல்லை.
ஆனா நான்னு ஒண்ணு இருக்கறதில யாருக்கும் சந்தேகம் இல்லை. அதை உணர ஒரு புலனும் தேவையில்லே.
இப்படி இல்லாததை இல்லை இல்லைன்னு தள்ளி கடைசியில மிஞ்சறது எதுவோ அதுவே நானா இருக்க முடியும். அதுவே ஆன்ம தரிசனம்.

No comments: