Pages

Thursday, May 12, 2016

அத்வைதம் - 4


இந்த நாம பார்க்கிற உலகமும் வியவகார சத்யம்தான்.
தோன்றுகிற எல்லாத்துக்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்கு.
எனர்ஜியை உருவாக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது என்கிறது விஞ்ஞான கோட்பாடு.
அப்ப இந்த தோன்றுகிற சமாசாரம் என்ன? இப்ப இருக்கிறது முன்னே என்னவா இருந்தது, அப்புறம் என்னவா இருக்கும்?
ஏன்ப்பா? எனர்ஜி பத்தி பேசறே? நாம மேட்டர் பத்தி பேசறோம் என்கிறதுதானே மேட்டரே ந்னா….
விஞ்ஞானிகள் எல்லாம் மேட்டரா, எனர்ஜியா, ரெண்டும் ஒண்ணான்னு இன்னும் விவாதிச்சுகிட்டு இருக்காங்க. ஒரு பக்கம் பாத்தா மேட்டர் மாதிரியும் இன்னொரு பக்கம் பாத்தா எனர்ஜி மாதிரியும் இருக்கு. உலகம் போற்றும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அப்படித்தான் சொல்லி இருக்கார்.
எப்படியும் மேட்டரும் அப்படியேத்தானே? ஒண்ணுத்திலேந்து இன்னொன்னு வர முடியுமே தவிர புதுசா ஒண்ணுமில்லாததுலேந்து எதுவும் வர முடியுமா? தங்க நகையை அழிச்சுட்டு புது டிசைன்ல பண்ணிக்கலாமே தவிர தங்கத்தயே உருவாக்க முடியுமா என்ன? தங்கம் ஒண்ணே. அதுவே வேற வேற மாதிரி உருவெடுக்குது. அப்ப இது செய்ன் ந்னு சொன்னாலும் சரிதான்; மோதிரம்ன்னு சொன்னாலும் சரிதான்; ஒட்டியாணம்ன்னு சொன்னாலும் சரிதான். இல்லை இது தங்கம்ன்னு சொன்னாலும் சரிதானே? எல்லாம் பார்வையிலே இருக்கு.

அதே போலத்தான் ப்ரம்மம் என்கிறது பார்வையிலே இருக்கு. நகைன்னு சொல்கிறதை மித்யான்னு சொல்றாங்க. வளையலோ மோதிரமோ தற்காலிகம்தானே? தங்கம்ன்னு சொல்லறதே சரி என்கிறது போல உலகம் என்கிறது மாறிகிட்டே இருக்கு; ப்ரம்மம் மட்டுமே சத்தியம் என்கிறாங்க.

No comments: