Pages

Monday, May 30, 2016

கிறுக்கல்கள்! - 118


மாஸ்டர் கடவுள் மீது பொதுவாக இருக்கும் எல்லா நம்பிக்கைகளையும் உடைப்பதை கண்டு பதறிப்போன ஒரு சீடர் கூவினார்: இப்படியே போனால் எங்களுக்கு பிடிமானம் என்றே ஒன்று இருக்காது!
மாஸ்டர் சொன்னார்: பறவை தன் குஞ்சை கூட்டிலிருந்து தள்ளிவிடும் போது குஞ்சு இப்படித்தான் கூவுகிறது!
பின்னொரு சமயத்தில் சொன்னார்: பாதுகாப்பாக கூட்டிலேயே இருக்கும் பறவை போல உங்கள் நம்பிகையிலேயே மூழ்கி இருந்தால் எப்படி பறக்க முடியும்? அது பறப்பது ஆகாது! அது சிறகுகளை அசைப்பது மட்டுமே!

No comments: