Pages

Wednesday, May 4, 2016

கிறுக்கல்கள்! - 114


சத்தியத்தை ஒரு கருத்தாகவோ பெயரிலோ அடைக்க முற்படுவது குறித்து மாஸ்டர் எச்சரித்துக்கொண்டே இருப்பார்.
ஒரு தத்துவவாதி கேட்டார்: “நீங்கள் சொல்லும் வஸ்து எங்கும் பரவியுள்ள நிரந்தர வஸ்துவா அல்லது தற்காலிகமான வஸ்துவா?”
மாஸ்டர் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தார். பின் அப்பாவியாக சொன்னார் “ஆமாம்!”
பிறகு ஒரு முறை சொன்னார்: நாம் சத்தியத்துக்கு ஒரு பெயர் கொடுக்க முற்பட்டால் அது சத்தியமில்லாமல் ஆகிவிடுகிறது!
குறும்புக்கார சீடன் ஒருவன் கேட்டான் “ அது சத்தியம் என்றால் கூடவா?”

சரியாகச்சொல்லப்போனால் ’அது’ என்று சொல்லும் போதே!”

No comments: