Pages

Tuesday, April 12, 2016

கிறுக்கல்கள்! - 101


ஏசு தன் சீடர்களிடம் பெற்றோரை வெறுக்கச்சொல்லி இருக்கிறாரே என்று சிலர் மாஸ்டரிடம் கேட்பார்கள். மாஸ்டர் சிரித்துக்கொண்டே சொல்லுவார்: பெற்றோரைப்போல பெரிய எதிரிகள் கிடையாது. ஒரு முறை சூப்பர் மார்கெட் போயிருந்தேன். ஒரு பெண்மணி இரண்டு சிறு குழந்தைகளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தார்.
அட! அழகான குழந்தைகள். என்ன வயசாச்சு?” என்றேன்.
பதில் வந்தது: “டாக்டருக்கு மூணு வயசு; வக்கீலுக்கு ரெண்டு வயசு!”

No comments: