Pages

Wednesday, March 30, 2016

கிறுக்கல்கள்! -94


பல மக்கள் ஏன் ஒரு மத அமைப்பில சேருகிறாங்கன்னா அது குற்ற உணர்ச்சி இல்லாம தன் மத கடமைகளை நிறைவேத்திடலாம்ன்னுதான்.” என்றார் மாஸ்டர்.
மாஸ்டருக்கு ஒரு பெண் சீடர் இருந்தார். அவர் ஒரு வியாபார பிரதிநிதியை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடந்தது.

அவர் என்ன ரொம்ப அழகானவரா?
இல்லை குருவே!
நிறைய பணம் சொத்து இருக்குமோ?
இல்லை அப்படி இருந்தாலும் அதை செலவழிக்க மாட்டார். கஞ்சப்பிசுநாரி!
ஏதேனும் கெட்ட பழக்கங்கள் உண்டோ?
ம்ம்ம் நிச்சயமா புகை பிடிக்கிறார். அவர் குடிக்கறது அளவுக்கு மிஞ்சித்தான்.
ம்ம்ம் புரியலையே? பின்னே ஏன் அவரை திருமணம் செஞ்சுக்க நிச்சயம் செஞ்சு இருக்கீங்க?
அவரோட வேலை ஊர் ஊரா போய் அவரோட கம்பனி பொருட்களை விற்கிறது. அதனால வீட்டுல பல நாட்கள் இருக்க மாட்டார். அதனால் எனக்கு திருமணம் ஆயிடுத்து என்கிற பெயரோட, ஒரு கணவனோட வழக்கமான தொல்லைகளும் இல்லாம இருக்கும்!

No comments: