Pages

Wednesday, March 16, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 3



தர்ம அடி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஒரு வழியாக போலீஸ் வந்து எல்லாரையும் சிரமப்பட்டு விலக்கியது. பைக் ஓட்டி வந்தவனை ஜீப்பில் ஏற்றி அழைத்துப்போனார்கள். திட்டிக்கொண்டே கூடி இருந்த மக்கள் அனைவரும் கலைந்து போனார்கள்.
திட்டிக்கொண்டே இளைஞன் டீக்கடைக்குள் நுழைந்தான்.
என்னப்பா ஆச்சு இவ்ளோ கோபமா இருக்கே?” கேள்வி வந்தது பெஞ்சில் அமர்ந்து இருந்த முதியவரிடமிருந்து.
எல்லாம் இந்த தறுதலைங்கலால. கண்ணு மண்ணு தெரியாம பைக் ஓட்ட வேண்டியது. அதுவும் இந்த பல்சார் வண்டிய ஏன் அப்பா அம்மா வாங்கித்தராங்கன்னு புரியல.இந்த அழகுல யார் வேகமா ஓட்டறாங்கன்னு போட்டி வேற நடத்துறாங்களாம்!
சின்ன குழந்த சார். எல்கேஜி யூகேஜி படிச்சுகிட்டு இருக்கும் போலிருக்கு. ஆயா கைய விட்டு உதறிட்டு அது ஓடின ஒரு செகண்டுல இந்த பாவி வந்து மோதிட்டான். @$*#%# தூக்கி எறிஞ்சு…. ஒரே ரத்தம். கை கால் கோணல்மாணலா இருக்கு. உசிர் இருக்க இல்லைன்னு தெரியலே!”
பாவம்! ”
என்ன சார் பாவம்ன்னு சர்வ சாதாரணமா சொல்றீங்க? எப்படி சார் இப்படி நடக்குது? சாமி எப்படி சார் இதை எல்லாம் அனுமதிக்குது? இதை அனுமதிக்கறா சாமியும் ஒரு சாமியா சார்?”
பெரியவர் பொறுமையாக பதில் சொன்னார். தீதும் நன்றும் பிறர் தர வாரான்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க இல்ல?”
மத்தவங்க தராம தானா வருதா சார்? என்ன கேட்டா இந்த பயல….”
உம் இந்த பயல?”
கண்ணுக்கு கண் வாங்கற மாதிரி இந்தப்பயல அந்த குழந்த வண்டி கொண்டு வந்து மோதி சாவடிக்கணும்!”
அந்த குழந்த எப்படி இருக்கோ! இருக்கோ இல்லையோ!”
செத்துப்போனாக்கூட அடுத்த ஜன்மத்துல பொறந்து இந்த பயல வண்டியால மோதி……” இளைஞன் ஏனோ நிறுத்தினான்.
ரொம்ப கரெக்டா சொன்னே!”
யோசித்தான். எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்குமே? ஒத்தன் என்ன அடிச்சா நா திருப்பி அடிக்கறேன். இன்னைக்கு முடியாட்டாலும் நாளைக்கி. என்னால முடியாட்டாலும் ஆளு வெச்சி… இல்ல போலீஸ்ல சொல்லி… எப்படியாவது அவனுக்கு திருப்பி கெடுதல் பண்ண பாக்கறேனே! எவ்வளவு சர்வ சகஜமா இந்த குழந்த பொறந்து அவனை மோதி சாகடிக்கணும்ன்னு தோணுது! அப்பறம் அவன் பொறந்து இவனை வண்டியால மோதி சாகடிச்சு அடுத்த ஜன்மாவுல இவன் அவனை சாகடிச்சு இவன் அவனை சாகடிச்சு …. இது எவ்வளோ ஜன்மம் தொடரும்? இது எப்பத்தான் நிக்கும்?
சார் …. “என்றபடி திரும்பி பார்த்த போது பெஞ்ச் காலியாக இருந்தது!

No comments: