Pages

Saturday, February 13, 2016

கிறுக்கல்கள்! - 89


மாஸ்டர் சொன்னார்: மக்கள் சந்தோஷமா இல்லாம இருக்க முக்கிய காரணம் அவங்களோட கஷ்டத்துல அவங்களுக்கு ஒரு குரூரமான திருப்தி கிடைக்குது.


மாஸ்டர் ஒரு முறை தொடர்வண்டியில் மேல் பெர்த்தில் படுத்து இரவுப்பயணம் செய்தார். தூங்கவே முடியவில்லை. காரணம் கீழ் பெர்த்தில் இருந்த கிழவி ஒருத்தி ஏதோ முனகிக்கொண்டே இருந்ததுதான். கூர்ந்து கேட்டார். “ கடவுளே எனக்கு எவ்வளோ தாகமா இருக்கு! கடவுளே, கடவுளே! எனக்கு எவ்வளோ தாகமா இருக்கு!”

பாவமே என்று கீழே இறங்கி இரண்டு பெரிய பேப்பர் கப் நிறை தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். ”இதோ உங்களுக்கு தேவையான தண்ணீர்.”
”கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்!” என்றவாறு வாங்கிக்குடித்தாள்.

அப்பாடா என்று மேல் பெர்த்தில் ஏறிப்படுத்து கொஞ்ச நேரத்தில் தூக்கம் வரப்போகும் நேரத்தில் கிழவி திருப்பி முனக ஆரம்பித்துவிட்டாள்.

கடவுளே எனக்கு எவ்வளோ தாகமா இருந்தது! கடவுளே, கடவுளே! எனக்கு எவ்வளோ தாகமா இருந்தது!”

No comments: