Pages

Monday, November 23, 2015

கிறுக்கல்கள் - 67


மாஸ்டர் சொன்னார்: ஞானம் என்கிறது விழிப்படைவது. இப்போது நீங்க எல்லாரும் தூங்கிகிட்டு இருக்கீங்க; கனவு காண்கிறீங்க. ஆனா அது கனவுன்னு உங்களுக்கு தெரியலை!

உதாரணத்துக்கு ஒரு கதை சொன்னார்.

சமீபத்தில புதுசா திருமணம் ஆன ஒரு பெண்மணி என்னை பார்க்க வந்தாங்க. கணவனோட குடிப்பழக்கம் பத்தி புகார் சொல்லி அழுதாங்க.

அவன் குடிப்பான்னு தெரிஞ்சு ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?”

அவர் குடிப்பார்ன்னு தெரியாது. ஒரு நாள் ராத்திரி குடிக்காம வீட்டுக்கு வந்தாரு; அப்பதான் தெரிஞ்சது!

No comments: