Pages

Thursday, November 19, 2015

கிறுக்கல்கள் - 65


பறவைகளின் தொல்லை மிக அதிகமாகிவிட்டது. குடியானவர்கள் சிலர் சேர்ந்து பல பறவைகளை சுட்டு வீழ்த்தினர்.

வயலில் வீழ்ந்து கிடந்த ஏராளமான பறவைகளை பார்த்த சீடன் ஜீசஸின் வாக்கியத்தை முணுமுணுத்தான்:  “ஒரு பறவை கூட தந்தையின் ஒப்புதல் இல்லாமல் விழுவதில்லை”. மாஸ்டரிடம் கேட்டான் : “இதுக்கு எதாவது அர்த்தம் வருதா?”

அழகான அர்த்தம் இருக்கு; ஆனா அதை பார்க்க வேண்டிய கோணம் வேற. லட்சக்கணக்கில பறவைகள் உருவாகி தொல்லையா மாறுகிற பின்புலத்தில அதை நீ பார்த்தா அதன் அழகு புலப்படும்.

No comments: