Pages

Wednesday, November 18, 2015

கிறுக்கல்கள் - 64


மாஸ்டருக்கு முல்லா நசருதீன் கதைகள் மிகவும் பிடிக்கும். அவருக்கு மிகவும் பிடித்த கதை இது:

ஓரிரவு முல்லா தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தார். அவரது மனைவி,” தூங்குங்களேன், என்ன பிரச்சினை?” என்றார்.

எதிர்வீட்டு அப்துல்லாவுக்கு நாளை ஆறு வெள்ளி காசு திருப்பிக்கொடுக்கணும்; எங்கிட்ட காசு இல்லே. அதான்!

மனைவி எழுந்தார். வாசலுக்குப்போய் அப்துல்லா அப்துல்லா!”  என்று கத்தினார்.

அப்துல்லா வெளியே வந்து, ”என்ன விஷயம்?” என்று கேட்டார்.

தோ பாருங்க; முல்லாகிட்ட இப்ப காசு இல்லே. அதனால நாளைக்கு உங்களுக்கு கடனை திருப்பித்தர முடியாது.

அத்துடன் திரும்பி வந்தார். நசருதீன் இப்ப நீ நிம்மதியா தூங்கு, அப்துல்லா தூக்கம் வராம அவஸ்தை படட்டும்!

அத்துடன் மாஸ்டர் சொல்லுவார்: யாராவது பணம் இல்லாம இருக்கணும். அதுக்கு யாரும் அவஸ்தை படணுமா என்ன?”

No comments: