Pages

Tuesday, November 17, 2015

கிறுக்கல்கள் - 63


இன்னொரு சீடன் நேரடியாக கேட்டான்.

இறப்புக்கு பிறகு வாழ்க்கை இருக்குன்னு நீங்க நம்பறீங்களா, இல்லையா?

நீ ஏன் அதையே போட்டு உழப்பிட்டு இருக்கேன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.

அதில என்ன ஆச்சரியம்?

ஜன்னலுக்கு வெளியே கை காட்டி சொன்னார்: தோ பார்! இது அருமையான வசந்த கால மாலை! இதை அனுபவியேன்! அதை விட்டுட்டு இதை வெச்சுண்டு கொழப்பிக்கறயே! இது எப்படி இருக்குன்னா, சாப்பிடுன்னு அருமையான திண்பண்டங்கள் தன் எதிரே வெச்சு இருக்கறப்ப இதெல்லாம் நாளைக்கு கிடைக்குமா இல்லையான்னு ஒரு குழந்தை கேட்டுண்டு சாப்பிடாம இருந்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு! நீ பட்டினியா இருக்கே; முதல்ல சாப்பிடு.

No comments: