Pages

Tuesday, November 10, 2015

கிறுக்கல்கள் - 59


இயற்கையின் வாயிலாக இறைத்தன்மை எப்படி கசிந்தோடுகிறது என்பதை சொல்லுவது மாஸ்டருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பூங்காவில் அமர்ந்து இருந்த போது திடீரென்று சொன்னார்:
அதோ பார்; அந்த நீலப்பறவையை. அந்த மரத்தின் கிளையில் மேலும் கீழும் மேலும் கீழும் ஊசலாடிக்கொண்டு தன் நிலை மறந்து பாடிக்கொண்டு இருக்கிறது. தன்னைத்துறந்து  உலகத்தை தன் இசையால் நிறைக்கிறது; மகிழ்ச்சியில் கொஞ்சம் கூட குறைவில்லை. ஏன் எனில் அதற்கு நாளை என்பது கிடையாது!

No comments: