Pages

Thursday, November 5, 2015

கிறுக்கல்கள்! - 56


மடாலயத்துக்கு பக்கத்தில் இருந்த காட்டில் காட்டுத்தீ பற்றிக்கொண்டு நிறைய மரங்கள் அழிந்து போயின.
இந்த செய்தி கிடைத்தவுடன் மாஸ்டர் தன் சீடர்கள் எல்லாரையும் வரச்சொல்லி செய்தி அனுப்பினார். “சீக்கிரம், செடார் மரங்களை மீண்டும் நட வேண்டும்!”
செடார்? இந்த வகை செடார் மரங்கள் முழுக்க வளர 200 வருஷங்கள் ஆகாது?
ஓஹோ! அப்படியானால் இன்னும் ஒரு வினாடி கூட தாமதிக்க முடியாது!


No comments: