Pages

Friday, September 25, 2015

கிறுக்கல்கள்! - 34


அந்த மாஸ்டர் மிக எளிய வேலைகளைக்கூட நேர்த்தியாக செய்வதை பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். அமர்வதோ, நடப்பதோ, டீ குடிப்பதோ, ஒரு கொசுவை விரட்டுவதோ ஏதானாலும்அதில் ஒரு நேர்த்தி, அழகு! அவர் செய்வதை எல்லாமே இயற்கையோட இயைந்த்தாகத் தோன்றும். அவர் ஏதுமே செய்யவில்லை ப்ரபஞ்சமே செய்கிறது என்று தோன்றும்.


ஒரு முறை அவருக்கு ஒரு பார்சல் வந்தது. சீடர்கள் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க  அதை வாங்கி, கட்டி இருந்த நூலை அவிழ்த்து, பேப்பரை பிரித்து உள்ளிருக்கும் பொருளை மெதுவாக விடுவித்தது ஒரு உயிருள்ள பொருளை கையாளுவது போல இருந்தது!

No comments: