Pages

Monday, September 21, 2015

கிறுக்கல்கள்! - 30



குருவுக்கு எப்போதும் தலை கனம் கிடையாது. எப்போதும் சாந்தமாக இருப்பார் என்று எதிர்பார்த்து வருபவர்கள் அவருடைய வெடிச்சிரிப்பை கண்டு அதிர்ந்து போவார்கள்
.
அப்படி எதிர்பார்த்து ஏமாந்த ஒருவர் சொன்னார்: இவர் ஒரு கோமாளி!

ஒரு சீடர் அவரைத் திருத்தினார்: இல்லை இல்லை. கோமாளியை பார்த்து நாம் சிரிக்கிறோம். இவரோ நாமே நம்மை பார்த்து சிரிக்க சொல்லித்தருகிறார்!

No comments: