Pages

Wednesday, September 16, 2015

கிறுக்கல்கள்! - 27



மாஸ்டர் இள வயதில் ஒரு அரசியல்வாதியாக இருந்தார். அரசுக்கு எதிரான ஒரு பெரிய போராட்டத்தை துவக்கி இருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் தன் வேலை வீடு எல்லாவற்றையும் துறந்து போராட்டத்தில் குதித்தனர். ஒரு பெரிய ஊர்வலத்துக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. ஊர்வலம் துவங்கி சிறிது நேரம் கூட ஆகவில்லை; அனைத்தையும் வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டார்.

சகாக்கள் வலுவாக எதிர்த்தனர்.

நீ இப்படி செய்ய முடியாது. இதற்கான ஏற்பாடுகள் மாசக்கணக்கில் செய்து இருக்கிறோம். நிறைய செலவாகி இருக்கிறது. இப்படி செய்தால் உனக்கு முரணான நிலைப்பாடு இருப்பதாக மக்கள் சொல்லுவார்கள்!

மாஸ்டர் சொன்னார்: என் அர்ப்பணிப்பு நிலைப்பாட்டுக்கு இல்லை; உண்மைக்கு!

No comments: