Pages

Friday, August 21, 2015

கிறுக்கல்கள்! - 7


மாஸ்டர் சொன்னார்: ஞானோதயம் என்பது எந்த ஒரு கணத்திலும் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து இருப்பதுஅது சுலபமே இல்லை!


பின் தன் நண்பர் பற்றி சொன்னார். நண்பர் எண்பது வயது தாண்டியும் பல பார்டிகளுக்கும் விழாக்களுக்கும் போவார். ஒரு நாளுக்கு ஒரு டஜன் பார்ட்டிகளுக்கும் அதிகமாகக்கூட போவதுண்டு.
ஒரு நாள் ஒரு பார்டியில் ஒருவர் நண்பரைக்கேட்டார், இது எத்தனையாவது பார்டி?
குறிப்புப்புத்தகத்தில் வைத்த கண்ணை எடுக்காமல் பதில் வந்தது: ஆறு!
என்ன செய்யறீங்க? அடுத்து எங்கே போகணும்ன்னு பாத்துகிட்டு இருக்கீங்களா?
இல்ல. இப்ப எங்க இருக்கேன்னு பாத்துகிட்டு இருக்கேன்!

No comments: