Pages

Wednesday, August 19, 2015

கிறுக்கல்கள்! - 5


அடுத்த நாள் குரு இன்னொரு கதையை சொன்னார்.

ஒரு திருடன் ஒரு கடையில் திருடப்போனான். பணப்பெட்டியின் கதவில் ஒரு நோட்டீஸ் தொங்கியது. “தயை செய்து கதவை உடைக்காதீர்கள். அது திறந்துதான் இருக்கிறது. கைப்பிடியை திருகவும்.”

கைப்பிடியை திருகியவுடன் அவன் மீது ஒரு மணல் மூட்டை விழுந்தது. விளக்குகள் அனைத்தும் எரிந்தன. அலாரம் அடிக்கத் தொடங்கியது. அக்கம் பக்கம் எல்லாரையும் எழுப்பிவிட்டுவிட்டது.

அடுத்த நாள் குரு அவனை சிறைச்சாலையில் பார்த்த போது மனக்கசப்புடன் இருந்தான். “இனிமே நா எப்படி ஒரு மனுஷனை நம்பறது?  யாரையும் நம்ப மாட்டேன். சுத்த அயோக்கிய பசங்க!”

No comments: