Pages

Tuesday, August 18, 2015

கிறுக்கல்கள்! - 4


குரு சொன்னார்: நம் குறைகளை கண்டறிய நல்ல ஒரு வழி மற்றவர்களுக்கு நாம் எப்படி எரிச்சலூட்டுகிறோம் என்று பார்ப்பது.

வழக்கம் போல ஒரு கிறுக்கலான கதை சொன்னார்: ஒரு முறை என் மனைவி சமையலறையில் ஒரு சாக்லேட்  டப்பா வைத்திருந்தார். ஒரு மணி நேரம் சென்ற பின் அதை எடுத்த போது எடை குறைவாக இருந்தது. திறந்து பார்த்தால் சாக்லேட்டில் ஒரு வரிசையே காணோம்! அவை ஒரு பேப்பர் பேகில் ஒழுங்காக அடுக்கப்பட்டு புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்த சமையல்காரரின் பை மீது இருந்தன! இதை பெரிசு படுத்த வேண்டாம் என்று என் மனைவி அவற்றை எடுத்து மீண்டும் டப்பாவில் வைத்து ஆசையை தூண்டாமல் இருக்க கப்போர்டில் கண்ணுக்கு தெரியாமல் வைத்து விட்டார்.
சமையல் காரி அன்றிரவே வேலையை விட்டு விலகுவதாக நோட்டீஸ் கொடுத்துவிட்டார்.
ஏன் என்று கேட்டேன்.
அவள் சொன்ன பதில்: என்னிடமிருந்து திருப்பித் திருடுபவர்களுக்கு நான் வேலை செய்ய மாட்டேன்!

No comments: