Pages

Saturday, July 25, 2015

உள்ளது நாற்பது - 44


பத்தனா னென்னுமட்டே பந்தமுத்தி சிந்தனைகள்
பத்தனா ரென்றுதன்னைப் பார்க்குங்காற் - சித்தமாய்
நித்தமுத்தன் றானிற்க நிற்காதேற் பந்தசிந்தை
முக்திசிந்தை முன்னிற்கு மோ

பத்தன்நான் என்னும்மட்டே பந்தமுத்தி சிந்தனைகள்
பத்தன்ஆர் என்றுதன்னைப் பார்க்குங்கால் - சித்தமாய்
நித்தமுத்தன் தான்நிற்க நிற்காதேற் பந்தசிந்தை
முக்திசிந்தை முன் நிற்குமோ.


நான் கட்டு உடையவன் என்று எண்ணும் போது மட்டுமே நான் பந்தம் உடையவன் முத்தி அடைந்தவன் என்னும் வித்தியாசங்கள் தோன்றுகின்றன. கட்டுடையவன் யார் என்று பார்த்து விசாரித்தால் எப்போதும் முத்தனாய் இருக்கும் தன்னை கண்டுகொள்வான். அப்போது கட்டுடையவன் என்னும் சிந்தனை நிற்காது. அப்படியெனில் தான் முத்தன் என்னும் சிந்தனை மட்டும் முன் நிற்குமோ? (நிற்காது)
தன்னை விசாரித்து தன்னை அறிந்தவனுக்கு 'தான் பந்தப்பட்டு இருந்தவன்; இப்போது முத்தியடைந்தவன்' என்னும் சிந்தனைகள் ஏதும் இரா.

बद्धत्वभावे सति मोक्षचिन्ता बन्धस्तु कस्येति विचारणेन ।
सिद्धे स्वयं स्वात्मनि नित्यमुक्ते क्व बन्धचिन्ता क्व च मोक्षचिन्ता ॥ ४१ ॥

³த்³த்வபாவே ஸதி மோக்ஷசிந்தா ப³ந்தஸ்து கஸ்யேதி விசாரணேன |
ஸித்³தே ஸ்வயம்ʼ ஸ்வாத்மனி நித்யமுக்தே க்வ ப³ந்தசிந்தா க்வ ச மோக்ஷசிந்தா || 41 ||

No comments: