Pages

Saturday, July 4, 2015

உள்ளது நாற்பது - 38


 என்னை யறியேனா னென்னை யறிந்தேனா
னென்ன னகைப்புக் கிடனாகு - மென்னை
தனைவிடய மாக்கவிரு தானுண்டோ வொன்றா
யனைவரனு பூதியுண்மை யால்.

என்னை அறியேன்நான் என்னை அறிந்தேன்நான்
என்னல் நகைப்புக்கு இடனாகும் - என்னை
தனைவிடயம் ஆக்க இருதான் உண்டோ ஒன்றாய்
அனைவர் அனுபூதி உண்மையால்.

நான் என்னை அறிந்தேன்; நான் என்னை அறியவில்லை என்றெல்லாம் சொல்லுவது நகைத்தலுக்கு உரியது. காரணம் என்ன? தன்னை அறிவதற்கு உரிய விஷயமாக ஆக்க தன்னைத்தவிர இன்னொரு நான் உண்டோ? அப்படி இல்லாமல் ஒரே 'தான்' மட்டுமே இருக்கிறது என்பது அனுபவப்பட்டவர்களின் கருத்து.

न वेद्म्यहं मामुत वेद्म्यहं मा- मिति प्रवादो मनुजस्य हास्यः ।
दृग्दृश्यभेदात् किमयं द्विधात्मा स्वात्मैकतायां हि धियां न भेदाः ॥ ३५ ॥

ந வேத்³ம்யஹம்ʼ மாமுத வேத்³ம்யஹம்ʼ மா- மிதி ப்ரவாதோ³ மனுஜஸ்ய ஹாஸ்ய: |
த்³ருʼக்³த்³ருʼஶ்யபேதா³த் கிமயம்ʼ த்³விதாத்மா ஸ்வாத்மைகதாயாம்ʼ ஹி தியாம்ʼ ந பேதா³: || 35 ||

No comments: