Pages

Wednesday, July 1, 2015

உள்ளது நாற்பது -37


அதுநீயென் றம்மறைக ளார்த்திடவுந் தன்னை
யெதுவென்று தான்றேர்ந் திராஅ - ததுநா
னிதுவன்றென் றெண்ணலுர னின்மையினா லென்று
மதுவேதா னாயமர்வ தால்.

அதுநீ என்று அம்மறைகள் ஆர்த்திடவும் தன்னை
எதுஎன்று தான்தேர்ந்து இராது - அதுநான்
இதுஅன்று என்றுஎண்ணல் உரன் இன்மையினால்என்றும்
அதுவே தானாய் அமர்வதால்.

வேதங்கள் அதுவே நீ (தத்வமஸி) என்று உரக்கச்சொல்கின்றன. அந்த அது எது என்று விசாரித்து தான் அங்கேயே அமர்ந்திடாமல் 'நான் இந்த உடலல்ல; நான் அந்த பிரம்ம ஸ்வரூபம் என்று இன்னொரு இயல்பை கற்பித்தல் மனோதிடமென்னும் விவேக வலிமை இல்லாததால் நடக்கிறது. எப்போதும் ஆன்மாவாகிய அப்பிரம்மமே தானாக அமர்ந்திருக்கிறது.

आह स्फुटं तत्त्वमसीति वेद- स्तथाप्यसम्प्राप्य परात्मनिष्ठाम् ।
भूयो विचारो मतिदुर्बलत्वं तत्सर्वदा स्वात्मतया हि भाति ॥ ३४ ॥
ஆஹ ஸ்பு²டம்ʼ தத்த்வமஸீதி வேத³- ஸ்ததா²ப்யஸம்ப்ராப்ய பராத்மனிஷ்டா²ம் |
பூ⁴யோ விசாரோ மதிது³ர்ப³லத்வம்ʼ தத்ஸர்வதா³ ஸ்வாத்மதயா ஹி பா⁴தி || 34 ||

No comments: