Pages

Monday, June 29, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 34


ஜூப்லி ஹாலில் ஒருமுறை எல்லாரும் அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டு இருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்தது. அதில் பங்கேற்றவர்கள் என்று ஒரு பட்டியல் வாசிக்கப்பட்டது.
அப்போது பகவான் சொன்னார் ரேடியோ பாடறது! பேசறது! யார் யார் பேசினான்னு பேரெல்லாம் சொல்லறது. ஆனா ரேடியோக்குள்ள யாருமில்லே! அதேப்போலத்தான் இதுவும். (தன் மார்பை தொட்டுக்காட்டி) இது பேசறது. ஆனா ரேடியோ மாதிரிதான். உள்ளே யாரும் ஆசாமி இல்லே! சாமிதான் இருக்கறது. என் இருப்பு என்னன்னா ஆகாசம் மாதிரி நிர்மலமா சுத்தமா இருக்கறது!”

ஒருமுறை பகவான் தக்‌ஷிணாமூர்த்தியைப் பற்றி சொல்லலானார். சனகாதி முனிவர்கள் நால்வர் முதல்லே தக்‌ஷிணாமூர்த்தியைப் பார்த்தப்போ ஒரு ஆலமரத்துக்குக் கீழே ஒரு இளைஞனா உக்காந்திருந்தார். அவரை பார்த்தவுடன் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அவரை அணுகினா. மூணு ப்ரதக்‌ஷிணம் பண்ணினா. பிறகு நமஸ்காரம் பண்ணி பாதத்துக்கு பக்கத்துல உட்கார்ந்து அவாளோட சந்தேகங்களை கேட்க ஆரம்பிச்சா. உள்ள பொருள்ன்னா என்ன? அதை எப்படி அடையறதுங்கறதுதான் அவா எல்லாருக்கும் கேள்வி.
தக்‌ஷிணாமூர்த்தியும் மிகுந்த கருணையாலே வாத்சல்யத்தோட அவாளோட பக்குவத்தைத் தெரிஞ்சு அவா கேட்ட சந்தேகங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே போனார். சொல்லச்சொல்ல சந்தேகங்கள் அதிகம் ஆகிக்கொண்டே போச்சே தவிர அடங்கினபாடா இல்லே!
தக்‌ஷிணாமூர்த்தி சரின்னு கருணையையும் வாத்சல்யத்தையும் மறைச்சுக்கொண்டு பேசாம மௌனமா இருந்துட்டார். சிஷ்யாளும் கொஞ்ச நேரத்துல மௌனத்துல கரைஞ்சுட்டாஎன்ற போது அங்கிருந்த முருகனார் தக்‌ஷிணாமூர்த்தி பேசினதா எந்தப் புராணத்துலேயும் சொல்லவே இல்லையேஎன்று கேட்டார்.
பகவான் உறுதியான குரலில் இப்படித்தான் உண்மையிலேயே நடந்ததுஎன்றார். முருகனார் புரிந்து கொண்டார்.

ஒருமுறை காலை பழைய ஹாலில் பகவான் உட்கார்ந்து இருந்தார். எல்லாரும் மௌனமாக அமர்ந்து இருந்தார்கள். அப்போது டக் டக் என்று கைத்தடி சத்தம் கேட்டது. உயரமான கண் தெரியாத முஸ்லிம் ஒருவர் உள்ளே நுழைய முயற்சி செய்துகொண்டு இருந்தார். பக்தர் ஒருவர் உதவிக்குப் போனார். உள்ளே அழைத்து வந்தார். வந்தவர் பகவான் எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அவரை பகவான் முன் கொண்டு சென்று அமர்த்தி இப்ப பகவான் முன்னே உட்கார்ந்து இருக்கீங்க என்றார்கள். அவர் பகவானை நமஸ்கரித்து விட்டு தான் பெஷாவரில் இருந்து வருவதாகவும் அங்கே ஒரு பிரசித்தியான மதரஸாவில் தான் மௌல்வி என்றும் சொன்னார். பகவானைப்பற்றி யாரோ படிக்கக்கேட்டு உடனே பகவானை தரிசிக்க ஆவல் மிகுந்தது. பகவானே தனக்கு ஆன்மீகத் தந்தை என்று தோன்றியது. உடல் குறையையும் பொருட்படுத்தாமல் உடனே கிளம்பினார். அடுத்த ரயிலை பிடித்தார். பல ரயில்கள் மாறி திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். இந்த கதையை அவர் சொன்னதும் உதவியவர் அவரிடம் பகவானிடம் எதுவும் கேட்க வேண்டுமா?” என்று கேட்டார்.
அவர் ஒண்ணுமில்லை. பகவானை பார்க்க ஆசையாக இருந்தது. பார்த்தாச்சு. இப்ப அவர் சொல்கிறாப்போல செய்யப்போறேன். அவ்வளவுதான்!” என்றார்.
பகவான் கண்களில் கண்ணீர் கசிந்தது!

No comments: