Pages

Wednesday, May 27, 2015

உள்ளது நாற்பது -27


மதிக்கொளி தந்தம் மதிக்கு ளொளிரு
மதியினை யுள்ளே மடக்கிப் பதியிற்
பதித்திடுத லன்றிப் பதியை மதியான்
மதித்திடுத லெங்ஙன் மதி.

மதிக்கு ஒளிதந்து அம்மதிக்குள் ஒளிரும்
மதியினை உள்ளே மடக்கி பதியில்
பதித்திடுதல் அன்றி பதியை மதியால்
மதித்திடுதல் எங்ஙன் மதி.

பதி என்பது ஆன்ம ஸ்வரூபம். இது ஜடமாகிய புத்திக்கு பிரகாசம் கொடுக்கிறது. அந்த புத்தியிலேயே பிரகாசிக்கிறது. இந்த புத்தியை உள்ளே திருப்பி அந்த ஆன்ம ஸ்வரூபத்தில் லயிக்க செய்வதே இயலுகின்ற காரியம். அப்படி இல்லாமல் புத்தியால் ஆன்ம ஸ்வரூபத்தை அறியவோ நினைக்கவோ முயன்றால் அது இயலாது என அறிவாயாக.
புத்தியாலோ மனத்தாலோ நாம ரூபம் அற்ற ஆன்ம ஸ்வரூபத்தை அறிய இயலாது. அப்படி அறிய முயற்சிக்கும் அறிவே அதற்கு தடையாக இருக்கும். இந்த அறிவு/ மனது செயலற்று நாசமாகிப்போனால்தான் ஆன்ம ஸ்வரூபத்தை உணரலாம்.

धिये प्रकाशं परमो वितीर्य स्वयं धियोऽन्तः प्रविभाति गुप्तः ।
धियं परावर्त्य धियोन्तरेऽत्र संयोजनान्नेश्वरदृष्टिरन्या ॥ २४ ॥
தியே ப்ரகாஶம்ʼ பரமோ விதீர்ய ஸ்வயம்ʼ தியோ()ந்த: ப்ரவிபாதி கு³ப்த: |
தியம்ʼ பராவர்த்ய தியோந்தரே()த்ர ஸம்ʼயோஜனான்னேஶ்வரத்³ருʼஷ்டிரன்யா || 24 ||

No comments: