Pages

Tuesday, March 31, 2015

ரமணர்- அடியார்கள் -மணவாசி ராமசாமி ஐயர்





ஒரு கார்த்திகை திருநாளன்று மணவாசி ராமசாமி ஐயரும் அவரது தந்தையும் பகவானை பற்றி கேள்விப்பட்டு அவரை தரிசிக்க விரூபாக்‌ஷ குகைக்கு வந்தனர். குகையின் வாசலில் நின்று இருந்த ஒருவர் ப்ராம்மண சாமியை யாரும் இப்போ தரிசிக்க முடியாது; தொந்திரவு பண்ணாதீங்கோ!” என்றார். ராமசாமி நீ யார் இப்படி சொல்ல?” என்று கோபமாக கேட்டார்.
அப்போது பகவான் யதேச்சையாக வெளியே வந்தார். பகவானை தரிசித்த மாத்திரத்தில் தன்னையும் அறியாமல் ஸ்வாமி, உடம்பும் மனசும் எப்பவும் துன்பத்திலேயே இருக்கு. இது எப்போதான் சரியாகும்?” என்று கேட்டார். பகவான் கடந்து போய்க்கொண்டே நான் வைத்தியரோ ஜோசியரோ இல்லை!” என்றார்.
ஸ்வாமி நீங்க பெரிய ஸ்திதியில இருக்கேள்ன்னு கேள்விப்பட்டு வந்தோம். எங்களுக்கு இன்னும் நேரம் வரலை போலிருக்கு!” என்றார்.
பகவான் சட்டென்று நின்று ஐயரை நோக்கினார். “மன உறுதியோட எல்லாத்தையும் ஏத்துக்க பழகணும். அப்புறம் உன்னை எதுவும் ஒண்ணும் செய்யாது!” என்றார்.

பின் ஒரு நாள் ஒரு பண்டிகை காலத்தில் ராமசாமி குகைக்கு வெளியே அமர்ந்து இருந்தார். மனம் நொந்துகிடந்தது. குகையில் இருந்து வெளியே வந்த பகவான் இவரைப்பார்த்து என்ன இப்படி உக்காந்து இருக்கேள்?” என்றார். ராமசாமி என்னத்தை சொல்லறது பகவானே? வீடு முழுதும் மருந்து பாட்டில்தான் இருக்கு! ஜீரணமும் ஆகிறதில்லை. தூக்கமும் வரதில்லை, எப்படி வாழப்போறேனோ தெரியலை!” என்றார்.
பகவான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்துக்கொண்டிருக்க அவருக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது.
பண்டிகை ஆனதால் எச்சம்மாள் நிறைய பட்சணங்கள், மற்ற உணவு வகைகளை கொண்டு வந்தார். எல்லாரும் பக்கத்தில் இருந்த நீர்நிலைக்கு உணவு உண்ண போனார்கள்.
மிக அழகான மாலைப்பொழுதும் அருமையான ரம்மியமான சூழ்நிலையும் இருந்தாலும் ராமசாமிக்கு அது ஒட்டவில்லை. வாழ்வே சுமையாக உணர்ந்தார்.
இவர் உணவு உண்ண வராததைக்கண்டு பகவான் வாசுதேவ சாஸ்த்ரியை அழைத்து அவரை அழைத்து வரச்சொன்னார். இவரோ போக மறுத்தார். “கஞ்சியே ஜீரணமாகலை; எண்ணை பண்டத்தை எங்கே சாப்பிடற்து?” என்றார். அப்போது பகவான் கை அசைத்து கூப்பிடுவது தெரிந்தது.
உடனே சென்று பகவான் அருகில் அமர்ந்தார். இலை போடப்பட்டு பல திண்பண்டங்கள் வைக்கப்பட்டது. பகவான் சாப்பிடுங்கோ!” என்றார். எல்லா பயமும் கணத்தில் நீங்கின. பல வருடங்கள் கழித்து வயிறார சாப்பிட்டார். அன்றிரவு நன்றாக தூங்கினார்.
காலை எழுந்த போது புத்துணர்வுடன் இருந்தார். புதிய வாழ்கை பிறந்தது!

ஒரு நாளிரவு விரூபாக்‌ஷ குகைக்கு வந்த சாது ஒருவர் கஞ்சா பொட்டலங்களை வைத்துச்சென்றார்.
அதைக்கண்ட மணவாசி ராமசாமி ஐயர் மிகுந்த கோபத்துடன் இதை யார் இங்கே வைத்தது என்று கூறி வெளியே வீசிவிட்டார்.
அதை கவனித்த பகவான் சாதுக்கள் சொத்து அது! உனக்கு ஏன் சாதுக்கள் பொல்லாப்பு வீணாக? அது வேணும் என்கிறவர் உபயோகப்படுத்தறா. நீ ஏன் அவா பொருளை வீசி எறியறே? உன் பொருளை வீசி எறிஞ்சா அப்போ உனக்குத் தெரியும்என்றார்.
அன்றிரவே காரணமின்றி அவரது வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது.

  

Monday, March 30, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 7




ஒரு நாள் பகவான் ஒரு பெரிய வட்டையில் நிறைய காய்கறிகளுடன் பருப்புக்கறியை கிளறிக்கொண்டு இருந்தார். தீ அதிகமாக இருந்தது. அடிப்பிடிக்க ஆரம்பித்தது.
பகவான் பக்கத்தில் இருந்த சுந்தரத்திடம் அடிப்பிடிக்கிறது; உடனே கீழே இறக்குஎன்றார். கைப்பிடித்துணி இல்லை. வட்டையின் எடையும் மிக அதிகம் ஒரு ஆளால் தூக்க முடியாது.
சுந்தரம் இதை எல்லாம் யோசிக்கவே இல்லை. பகவான் சொன்னதும் வெறுங்கையால் அதை அப்படியே பிடித்து தூக்கி கீழே இறக்கிவிட்டார். கொஞ்ச நேரம் கழிந்துதான் எப்படி ஒரு பெரிய காரியம் நடந்து இருப்பதே உரைத்தது!

சமையலறையில் கைங்கர்யம் செய்து வந்த சுந்தரத்துக்கு ஆஸ்த்மா இருந்தது. சமைக்கும் போது அது பெரும் சிரமத்தைக்கொடுத்தாலும் அவர் அதைப்பற்றி யாரிடமும் சொன்னதில்லை. வாழும் வரை பகவானுக்கு தொண்டு செய்துகொண்டு இருப்பதையே விரும்பினார்.
மலையில் இருக்கும் சில சாதாரண இலைகளை வைத்து விதவிதமாக பகவான் துவையல் செய்வார். அப்படி செய்யும் போது சமையலறையில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் சுவை பார்க்கக்கொடுப்பார்.
ஒரு நாள் இது போல ஒரு துவையலை செய்த பகவான் வழக்கம் போல எல்லாருக்கும் சுவைக்கக் கொடுத்தார். சுந்தரத்துக்கும் கொஞ்சம் கொடுத்தார். அப்போது “இது உனக்கு மருந்து” என்றார்.
சில நாட்கள் போன பிறகுதான் தனக்கு ஆஸ்த்மா பாதிப்பே இப்போதெல்லாம் வருவதில்லை என்று சுந்தரத்துக்கு நினைவு வந்தது!

ஒரு நாள் பகவான் அதிகாலை சமையலறைக்கு வந்து முந்தைய நாள் சாம்பாரை அடுப்பில் ஏற்றினார். சில பச்சை இலைகளை கழுவினார். அவற்றை சாம்பாரில் போடச்சொன்னார். பின் பொறுப்பை சுந்தரத்திடம் ஒப்படைத்தார். ”சுந்தரம், இலையோட பச்சை நிறம் முழுக்க போகணும். அது வரை கிளறுஎன்றார்.
நீண்ட நேரம் பகவான் அங்கே வரவே இல்லை. சாம்பாரும் வற்றிக்கொண்டே இருந்ததே தவிர இலையின் நிறம் மாறவே இல்லை! சரி, இன்னைக்கு இட்லிக்கு சாம்பார் யாருக்கும் கிடைக்காது என்று நினைத்து கொண்டார் சுந்தரம். இருந்தாலும் பகவான் சொன்னபடி கிளறிக்கொண்டே இருந்தார். காலை உணவுக்கு கொஞ்ச நேரம் முந்தான் பகவான் அங்கே வந்தார். வந்தவர் இன்னுமா கிளறிக்கொண்டு இருக்கே?” என்று மலர்ந்த முகத்துடன் கேட்டார். சுந்தரத்தின் பேச்சு மீறாத செயல் அவருக்கு மிகவும் பிடித்துப்போயிற்று என்று சுந்தரம் உணர்ந்து கொண்டார். சற்று நேரத்தில் அது தயாராகி எல்லாருக்கும் பரிமாறப்பட்டது! அது அது வரை யாரும் சுவைத்து இல்லாதபடிக்கு இருந்தது!

ஒரு நாள் காலை சமையலறையில் பகவான் காய்கறி வெட்டிக்கொண்டு இருந்தார். சுந்த்ரம் உட்பட சிலர் உதவி செய்து கொண்டு இருந்தனர். சற்று நேரம் சென்றபின் சுந்தரம் கிரிப்ரதக்‌ஷிணம் செல்ல உத்திரவு கேட்டார். வேலைகள் நிறைய இருந்தன. அதனால் எல்லாரும் பகவானே அனுப்பாதீங்கோ; வேலை நிறைய கிடக்கு!” என்றனர்.
பகவான் ப்ரதக்‌ஷிணம் பண்ணறதா ச்சங்கல்பம் பண்ணியோ?” என்று கேட்டார்.
அப்படி ஒண்ணுமில்லே! நேத்து ராத்திரியே ஒத்தரோட போக நினைச்சேன். அது நடக்கலைஎன்றார்.
அப்போ ராத்திரியே சங்கல்பம் பண்ணிட்டியே! சரி போயிட்டு வா. முதல்லே சங்கல்பத்தை நிறைவேத்து. காய் வெட்ட வேண்டாம். உடனே கிளம்பு. சங்கல்பமே சம்சாரம்என்றார்.